டுவிட்டர் குறள்கள்
திருக்குறளுக்குத்தான் எத்தனை பிரேமை தமிழ்கூறும் இணையுலகில். பத்தாவது பப்ளிக் எக்ஸாமில் அதிக மார்க் வாங்கவேண்டுமென்று பிற மொழிக்காக ஒன்றாவதிலிருந்தே தமிழை ஒதுக்காமல் பள்ளியில் ஒருபாடமாக படிக்கும் அநேகருக்கு முதல் மனப்பாடப்பகுதி குறள்தான். தமிழ் மத்தியமர் பலரின் முதல் இலக்கிய பகடியும் அங்குதான் தொடங்குகிறது. அகர முதல எழுத்தெல்லாம் தகர ஸ்லேட்டில் எழுத வேண்டும் என்பதில் தொடங்கி, பெரியவர் ஆகி அலுவலகத்தில் டை கட்டி வாழ்வாரே வாழ்வார் மற்றவர் கைகட்டி பின் செல்வர் என்று நொந்துகொள்வது வரை குறள்தான் …
View full postகா கா பா பா டா டா
ஞாயிறை முன்னிட்டு ஒரு சிறிய, மென்மை அறிவியல் பதிவு. கீழே உள்ள வீடியோவை பார்த்துக்கொண்டே கேளுங்கள். சில நொடிகளே பிடிக்கும். செய்துவிட்டீர்களா? இப்போது கண்ணை மூடிக்கொண்டு, வீடியோவை ஓடவிட்டு மீண்டும் என்ன கேட்கிறீர்கள் என்று பாருங்கள். [யூடியூப் சுட்டி] கேள்வி இதுதான்: வீடியோவை பார்த்துக்கொண்டே கேட்டபோதும், பார்க்காமல் கேட்டபோதும், அதில் தோன்றுபவர் என்ன உச்சரித்தார் என்று சொல்ல முடியுமா? கா கா (ga ga) வா, பா பா (ba ba) வா, இல்லை டா டா …
View full postவண்ணத்துபூச்சியின் நிறமற்ற வானவில்
உத்திரத்தில் ஆடும் ஹரிக்கேன் விளக்கு வெளிச்சத்திலும் பாட்டியின் அந்தக்கால நவரத்தின பெண்டண்ட்டில் மற்ற கற்களைக்காட்டிலும் வைடூர்யம் மட்டும் டாலடித்து ஜுவலிக்கிறதேன்? தோகை இளமயில் ஆடி வருகையில் வானில் மழைவராவிட்டாலும், தோகை நிறங்கள் அசாதாரணமாய் ஒளிருவதேன்? சாலையிலுள்ள மழைநீர்தேங்கிய குட்டைகளில் பெட்ரோல் டீஸல் ஒழுகிப் படர்ந்து, தாண்டிச்செல்கையில் நாம் பார்க்கும் கோணத்திற்கேற்ப பல நிறங்களில் தெரிவதேன்? கணினி மென்தகட்டை வெளிச்சத்தில் அப்டி இப்டி திருப்பினால் பல நிறங்களாய் தெரிவதேன்? அநேக வண்ணத்துபூச்சியின் இறகுகள் பளபளப்பதேன்? பதில், இரிடெஸன்ஸ். அப்படியெனில் …
View full postசுவர்களுடன் பேசியவள், ஆனால்…
ஒரு ஊரில் ஒரு மாமியார் வாழ்ந்தாள். ஆனால் அவள் குறைகளை யாரிடமும் சொல்லமுடிவதில்லை. அவளுக்கு இரண்டு மாட்டுப்பெண்கள். இரண்டு பிள்ளைகள். இரண்டு கைகள். இரண்டு கால்கள். ஆனால் மொத்தம் இருபத்தியொரு விரல்கள். மாட்டுப்பெண்கள் அவளை படுத்தினர். பிள்ளைகள் உதாசீனப்படுத்தினர். ஆனால் அவள் நான்கு வைர மோதிரங்கள் அணிந்திருந்தாள். கணவன் இருந்த காலங்களில் ஊரில் கோப்யமாக வாழ்ந்தவள் வாயைத்திறந்து பிறரிடம் குறைபட்டுக்கொள்வதே தெரியாது. ஆனால் அவள் மறுமணம் புரிந்துகொள்ளவில்லை.
View full postஸீஸன் கச்சேரியும் தொய்வை அளவையும்
தற்கால சங்கீத கச்சேரிகள் பெரும்பாலானவற்றில், குறிப்பாக ஸீஸன் சமயத்தில் சென்னையிலும் சென்னையைச் சார்ந்த பகுதிகளிலும் நடப்பவைகளில், சில பொது அம்சங்களைக் காணலாம்.உதாரணத்திற்கு, இக்கச்சேரிகள் 1 வர்ணம், 1 சப் மெயின், 1 மெயின் உருப்படி், 1 சொதப்பல் முயற்சி, 1 அபார முயற்சி, 3 துக்கடா, 2 பஜன், 1 மங்களம் ஆகிய பத்துப்பாட்டு் அடங்கிய, எல்லா வகை ரசிகர்களையும் திருப்தி செய்யும், நகர வாழ்கையின் அவசர கதி சிலுவையில் அறையப்பட்டுள்ள, இரண்டரை மணி நேர, தலை …
View full postநோபல் வென்ற கிராஃபீன்
2010 இயற்பியல் நோபல் இங்கிலாந்தின் மான்செஸ்டர் பல்கலைகழகத்தைச் சேர்ந்த ஆண்ட்ரீ கெய்ம் (Andre Geim) மற்றும் கொன்ஸ்டெண்ட்டின் நொவோஸெலெவ் (Konstantin Novoselov) இருவருக்கும் அளிக்கப்பட்டுள்ளது. கிராஃபீன் (Graphene) என்ற பொருளை 2004இல் கண்டுபிடித்ததற்காக இப்பரிசு இவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. இருபரிமாண கிராஃபீன் பற்றிய “பூமி உடையும் பரிசோதனைகள்” நிகழ்த்தியதற்காக (அதாங்க groundbreaking experiments) இப்பரிசு என்கிறது நோபல் பரிந்துரை. அப்படி என்ன கிராஃபீனுக்கு திடீர் மவுசு? தமிழ்பேப்பரில் வெளியாகியிருக்கும் என் கட்டுரையில் படித்துப்பாருங்கள். சில வாரங்கள் ஆகிவிட்டபடியால், கீழே …
View full postநானோ ப்லூயிட்ஸ்
வலையில் அறிவியல் பக்கங்களில் அவ்வப்போது அகழ்ந்து கொண்டிருந்தீர்களென்றால் நானோ திரவங்கள் அல்லது நானோ ஃப்லூயிட்ஸ் (nanofluids) என்று ஒரு விஷயம் கேள்விப்பட்டிருப்பீர்கள். என்ன என்று சற்று விரிவாக தமிழில் பார்ப்போம்.
View full postவாட்டர் பாட்டில் சூரிய விளக்குகள்
அன்றே சாலமன் சொன்னார், எண்ணையில்லாமல் திரியில்லாமல் விளக்குகள் தலைகீழாக தொங்குமென்று. இது சுமார் முப்பது வருடம் முன்னர் பட்டினத்தில் பூதம் திரைப்படத்தில், விட்டத்தில் தொங்கும் மின்சார சாண்டிலியர் விளக்குகளை வியந்து பூதமாய் அசோகன் வசனித்தது. எண்ணையின்றி, மின்சாரமின்றி வீட்டு விளக்குகள் எரியுமா? எளிய தொழில்நுட்பத்தில் தண்ணீர் பாட்டில் சூரிய விளக்குகள் செய்திருக்கிறார்கள். சில வருடங்கள் முன், நல்ல வெய்யில், ஒரு மின்வெட்டு நாளில் பிரேஸில் பொறியியலாளருக்கு, எதேர்சையான வியர்வையில் தோன்றிய கண்டுபிடிப்பு. அருகில் படம். சகாய விலையில், …
View full postபல்லவி பட்டறை
[சொல்வனம் இணைய-இதழில் வெளியாகியிருக்கும் என் ராகம் தானம் பல்லவி – பாகம் மூன்று கட்டுரையின் ஒரு பகுதி] பல்லவி என்பது நிச்சயம் வெறும் மெலடி மட்டுமல்ல. பல்லவி கலையும் அறிவியலும் கலந்துசெய்த கலவை. இந்த கருத்துக்கு எனக்கு டாக்டர். எம். வேதவல்லி சப்போர்ட். முதலில் ராகத்தை மெலடியாய் ஆலாபனை செய்துவிட்டு, தானமாய் லயம்சேர்த்து, பிறகு முத்தாய்ப்பாய் ராக, மெலடி லய கணக்கு மிளிர பல்லவி சாஹித்யம் அமைத்து பாடுவதே முறை. சாஹித்ய சாதுர்யங்களும், ராக பிடிகளும், லய …
View full postஞாபகம் வருதே 2.0
சமீபத்தில் ஞாபகம் வருதே ஞாபகம் வருதே என்று பாட்டு போட்டு அலுமினி(ய) பாத்திரங்களை அழைத்து நான் என்றோ (ஓரளவு) படித்த பொறியியல் கல்லூரி தன் பவள விழாவை ஒரு வாரம் கொண்டாடியது. அநேகமாக வயதுவந்தவர், பெண்கள் என்று அனைவருக்கும் ஈமெயிலித்து, அதில் பலர் வருவதாய் பதில் மின்னஞ்சல் சத்தியம் செய்து, சாண்டா கிளாராவில் சரியான கணக்டிங் ஃப்ளைட் கிடைக்காததால் மெயிலிடப்படாத சிலர் மட்டும் ஓசி கார் மொஃபஸல் பஸ் ஏறிவந்திருந்தோம்.
View full postமின்னஞ்சல் வழி சந்தா
அறிவியல்
- பூனை குறுக்கே நடந்தால், மேக்னெட்டோரிஸப்ஷன்
- ஹப்பர்ட் சிகர உச்சியிலிருந்து…
- டௌகன் பறவைகளுக்கு ஏன் அலகு பெரிதாக உள்ளது?
- வண்ணத்துபூச்சியின் நிறமற்ற வானவில்
- ஏன் பல்லி கொன்றீரய்யா
- தொட்டால் தொடுதிரை பூ மலரும்
- தாமரை இலையும் மகா நீரொட்டா பரப்புகளும்
- இயற்கையின் நேனொடெக்னாலஜி
- வாட்டர் பாட்டில் சூரிய விளக்குகள்
- 2011 வேதியியல் நோபல் பரிசு
க்ளிக்கினவை
சொல்வனத்தினிலே
- ஆயிரம் தெய்வங்கள் - தேசீயஸ்
- மகரந்தம்
- கைக்கு எட்டிய வானம் அல்லது காட்சிப்பிழை அல்லது ஜூஜூ தவளை சொன்னகதை
- பெண்கள், பெண்கள்!
- வாசகர் மறுவினை
- அர்னல்டூர் - ஐஸ்லேன்ட் குற்றப் புனைவு எழுத்தாளர்
- 24 மணி நேரம்
- குமரி மாவட்டச் சான்றோர் சமூக வரலாற்றில் ஆராயப்பட வேண்டியவை
- மூப்பு
- அமெரிக்க-பாகிஸ்தான் உறவு - எங்கே செல்லும் இந்தப்பாதை?





