Archive for இசை

கர்நாடக சங்கீத வருங்கால நட்சத்திர நம்பி(க்கை)கள்

31TH_2RAMAKRISHNAN__879217f

[சொல்வனம் இணையைதழில் வெளியாகியுள்ள என் கட்டுரையின் மீள்பிரசுரம்]

“இஃப் மை மியூஸிக் இஸ் லௌட், யூ ஆர் ஓல்ட்” என்று மார்பிலுறையும் வாசகங்களுடன், கையில் மான்முத்திரை அபிநயித்தபடி, விளையாட்டுகளில் கழியவேண்டிய அன்றைய களிவெறியை “ப்ரோ-ஷோ” கோஷ்டிகாண பேரிரைச்சலில் கரைத்து, ஒரே இரவில் இன்றைய இளைஞர்கள் பலர் தன்னிறைவடைகின்றனர். கொலவெறி எனும் சொல்லாடலை ஆறுமாதத்திற்கு தமிழ்நாட்டில் எவரும் உபயோகிக்கக்கூடாது என்று பப்ளிக் இண்ட்ரஸ்ட் லிட்டிகேஷன் போடுமளவிற்கு திரையிசையில் தங்கள் இயலாமையை வெளிப்படுத்தியே இளைஞர்கள் ஒரே மெட்டில் பிரபலமாகிவிடுகின்றனர்.

இக்கட்டுரை, இவர்களில் அநேகரால் தீண்டப்படாமல், இன்று பொருளீட்டவல்ல தொழிற்கல்வி பயின்றும், யூஎஸ் மேற்படிப்பு, குடியுரிமை என பலவற்றை துறந்தும், காசிக்கு போகாமலே காசை விடுத்தும், கர்நாடக சங்கீதமே லயிப்பு என தமிழ்நாட்டு தூசி பறக்கும் ஜமக்காளத்தில், தொடையில் தாளம் தட்டும் இளம்கலைஞர்களை பற்றியது.

தமிழிலக்கிய வணிகசூழலின் முரண்நகை வேண்டின், இவ்விசைத்துறையிலும் உள்ளூர் சபா அல்லக்கைகளின் “கர்நாடக இசை வானில் சிறகடித்து பறக்காமல் எந்த ஆபிஸில் குமாஸ்த்தாவாய் குப்பைகொட்டுகிறாய் நீ? மொத்தமாய் வந்துவிடு, நாளையே உன் கொடி பறக்குமாக்கும்” போன்ற சொற்பேச்சில் மதியிழந்து, இருக்கும் சம்பாத்யவேலையை துறந்து திக்குதெரியாமல் தவிக்கும் சிலரும் இவ்விளைஞர்களில் உண்டு.

இக்கட்டுரை நான் கேட்டு மகிழ்ந்த சில வளரும் கர்நாடக இசை கலைஞர்களை வாசக-ரசிகர்களுக்கு அறிமுகிக்கும் முயற்சி. ஒருவகையில், என் கையாலாகாத கோபத்தின் விளைவு. விளக்குகிறேன்.
» Read more..

2011-12 சென்னை மார்கழி இசைவிழா பல்லவிகள்

05theftb-r_vedavalli_21330f

[சொல்வனம் இதழில் வெளியாகியுள்ள என் கட்டுரையின் மீள்பிரசுரம்]

ராகம் தானம் பல்லவி என்றொரு கட்டுரைத்தொடரை கடந்த இரு வருடங்களில் அவகாசமிருக்கையில் சொல்வனத்தில் எழுதிவந்தேன். அதை முடித்துவிடவேண்டாம் என்ற பணிவான மிரட்டலுக்கிணங்க “தொடரலாம்” அடிக்குறிப்பிட்டு பூடகமாய் கிடப்பிலிட்டிருந்தேன். தொடருவதற்கு 2011-12 சங்கீதகாலம் “இதி சமயமுரா…” இணைய குல பாலகா என்றழைக்கிறது.

இணையத்தின் “சுட்டி” வசதியில் முன்கதைச்சுருக்கமென மெகாசீரியல் ஓட்டுவது எடுபடாதெனினும் வாசகர் சிலர் பிரிண்ட்டிட்டு படிப்பதால் இக்கட்டுரையின் உள்ளடக்கம் கருதி, ஒரு ரா.தா.ப. முன்னிசைச் சுருக்கம்.
» Read more..

இயல் இசை ஆடை

music-t-shirts-01

தோடியில் ஒலிக்கும் தொண்டை செருமல்களுடன் வணக்கம் கூறி விடைபெற்றுக்கொண்டிருக்கும் 2011 சென்னை இசைவிழாவிலும், அடுத்து எழுத்தாளர்களுக்கு வருடத்திற்கு ஒருமுறை மட்டும் மெகா சைஸ் கட்டவுட்டுகள் வைத்து தடுத்தாட்கொள்ளும் 2012 சென்னை புத்தகக் காட்சிவிழாவிலும் என்னைக் கவர்ந்தது, கர்நாடக இசை, தமிழ் சார்ந்த வாசகங்களுடன் வெளிவந்துள்ள டி-ஷர்ட்கள்.

புத்தகக் காட்சியில் அரங்கின் நுழைவாயிலிற்கு எதிர் கோடியில் தமிழ் வாசக டி-ஷர்ட்டுகள் நல்ல விற்பனை. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும், ஆதலினால் காதல் செய்வீர், நாம் யார்க்கும் குடிமை அல்லோம், நமனை அஞ்சோம் போன்ற வாசகங்கள் கவர்ந்தன. ஆண்களுக்கு கிட்டத்தட்ட அனைத்தும் கறுப்பு நிறத்தில் இருப்பது குறை. அதுவும் “தமிழ்”, “அ” என்று மட்டும் எழுதிவைப்பது… வாசகங்களுக்கு இன்னும் சற்று மெனக்கட்டிருக்கலாமோ. வேறெதுவும் தோன்றவில்லையெனில், அ-விற்கு பதில் ஆ என்று இட்டால் சுஜாதா ரசிகர்கள் வாங்கலாம். இல்லை அவசரத்திற்கு நாஞ்சில் நாடனின் புத்தகத் தலைப்புகளை சுட்டாலே போதும்.
» Read more..

ஹிண்டுவில் சங்கீதம் சார்ந்த கட்டுரை

சென்னை மார்கழி இசை விழாவை ஒட்டி, ஊடகங்களில் விமர்சன கச்சேரிகள் நடந்தேறியபடி. மாற்றாக ஆங்கில நாளிதழ் தி ஹிண்டு வின் வாசகர்களின் மென்புலன்கள் நோவா வண்ணம் அடியேனுடைய விமர்சனம் தவிர்த்த கட்டுரை இன்று வெளியாகியுள்ளது.

கட்டுரைக்கு திரு.கேஷவ் வழக்கமான அவரது பாணி கோட்டு சித்திரம் தந்துதவியுள்ளது, என் பாக்கியம்.

ஒரே நேர்/இணைய சந்திப்பில் என் சங்கீத விமர்சனம் மற்றும் மென்நகைச்சுவை எழுத்து பிடித்துபோய், அவ்விரண்டில் முடிந்ததை இவ்வூடகத்தில் அரங்கேற்றிய இரு நண்பர்களுக்கும் நன்றி.

இசை விழா விமர்சன கட்டுரைகள் இங்கு தொடரும்.

2011 சென்னை மார்கழி இசைவிழா – 01

[இன்றைய தமிழ்பேப்பரில் அழகிய ஆம்பிளை படங்களுடன் வெளியாகியிருக்கும் என்னுடைய கட்டுரையின் மீள்பதிவு]

வந்துவிட்டது மற்றொரு மெட்ராஸ் மார்கழி சங்கீத சீஸன். வந்துவிட்டது மற்றொரு விமர்சன கட்டுரை. படித்துவிட்டு பாடகர்கள் மெர்ஸலாகி தங்களை உடனே உடைத்து வார்த்துக்கொள்ளமாட்டார்கள்; அவர்கள் “பாட்டுக்கே” இனியும் பாடுவர். படித்துவிட்டு ரசிகர்களும் பெரும்பாலும் தங்கள் அபிமானங்களை மாற்றிக்கொள்ள மாட்டார்கள். “கேட்பர்களையே” கேட்பார்கள். இலக்கியவிமர்சனங்களைப் போன்ற பயன்களுடையவையே மரபிசை சங்கீத விமர்சனங்களும்.

டிசெம்பர் இருபதன்று (2011) நடுப்பகலில் அகதெமியில் “பாட்ரன்” வாயில் வழியே இருட்டோரமாய் நுழைந்து இருக்கையிலமிழ்கையில், அமர்களமான மேடையில் திருச்சூர் பிரதர்ஸ் (கிருஷ்ன மோஹன், ராம்குமார் மோஹன்) ஆஹிரியில் மாயம்மா என்றபடி நல்ல குரல் வளம். நல்ல கூட்டம்.
» Read more..

பட்டியல்கள்

இணையமும் அதில் வலைப்பூக்களும் பூத்துக்குலுங்கும் காலத்திற்கு முந்தைய ஒரு பிராயத்தில் புத்தக புழுவில்லையாகினும், பூச்சியாயிருந்தேன். படித்த புத்தகங்களை ஒரு குயர் கோடுபோட்ட நோட்புக்கில் பட்டியலிட்டேன். பத்து வருடமாக பட்டியலிட்டதில், என்னிடம் உள்ள புத்தகங்கள் என்றில்லாமல், அக்கம்பக்கத்தில் ஓசியில் படித்தவை என சுமார் ஐநூறு புத்தகங்கள் தேறியது. புனைவு, வினவு, அறிவியல், அவியல், என பலசரக்கு தலைப்புகள் பட்டியலில் அடக்கம். எதற்கு இந்த சுய விளம்பரப் பட்டியல் என்று தெரியவில்லை; கேர்ள்பிரண்ட்ஸ்களிடம்கூட காட்ட எத்தனித்ததில்லை. டூ விட்டுவிடுவார்களோ என்று பயம்.

நோட்டினுள் மயில் இறகைவைத்து, அதற்கு அரிசி வைத்து, தடவிக்கொடுத்து, நாளொரு புத்தகமும் பொழுதொரு பக்கமாய் இப்பட்டியலை வளர்த்ததில் உபயோகம், பட்டியல் வளர்வதற்காகவே மூச்சடக்கி படித்த புத்தகங்கள். அறிவுப்பசிக்கு தீனி என்றெல்லாம் சிலுப்பிக்கொள்ளமாட்டேன்; கார்ல் சாகன் எழுதியவை போன்ற சில அறிவியல் புத்தகங்கள் போக பலதும் ஆங்கில கதைப்புத்தகங்கள். சில படிக்கும்முன்பே மறந்துவிடும். சில ஸோமர்ஸெட் மாம், ஃபிரான்ஸ் காஃப்கா வகையறா இலக்கியங்கள் சொப்பனத்திலும் அச்சுறுத்தும். பயத்தை போக்க சந்தில் வேப்பமரத்தடியில் நிலா நிழல் போல ஏதாவது ”லைட் ரீடிங்” செய்யவேண்டிய நிர்பந்தம்.
» Read more..

ராகம் தானம் பல்லவி – பாகம் 8

சென்ற கட்டுரையின் முடிவில் ரா.தா.ப. உருப்பிடியில், கச்சேரியில், பல்லவியின்  நிரவலுக்கு பின் ஸ்வரகல்பனை (கற்பனைத்திறனுக்கேற்ப ராகத்தில் ஸ்வரக்கோர்வைகளாக பாடுவது) செய்வார்கள் என்று குறிப்பிட்டிருந்தேன். இதில் திருத்தம். அதாவது, அனுலோமம் பிரதிலோமம் என்று இக்கட்டுரையில் விவரிக்கப்போகும் அங்கத்தை மேடையில் பல்லவி பாடுகையில் ஒதுக்கிவிடும் பாடகர்களே, நிரவலுக்கு பின் நேரடியாக ஸ்வரகல்பனைக்கு செல்வர். தேர்ந்த பாடகர் ரா.தா.ப.வில் எடுத்துக்கொண்ட பல்லவியில் அனுலோமம் பிரதிலோமம் செய்த பிறகே ஸ்வரகல்பனை அங்கத்திற்கு செல்வார்.

அனுலோமம் பிரதிலோமம் பற்றி நிறைய வீடியோ டெமோக்களுடன் சமீபத்திய சொல்வனம் இணைய இதழில் விரிவாக எழுதியுள்ளேன். சாராம்சம் இங்கு மீள்பதிவாய்.
» Read more..