அ[க]வியல்

“சண்டேனா இரண்டு இல்ல, ஞாயிற்றுகிழமை” என்கிற உபதலைப்பில் கொடுத்தால் வாசிப்பீர்கள்தானே.

*

இன்று சுவாரஸ்யமாய் சொல்ல எதுவுமில்லை. உபயோகமாய்ச் சொல்லவும் ஏதுமில்லை. பகிர அக்கப்போர்களும் கைவசமில்லை.

என்று மட்டும் எழுத்தில் சொன்னால், வாசிக்க சுவாரஸ்யமாகவோ, உபயோகமாகவோ, அக்கப்போராகவோ இருக்குமா?

இல்லை, எழுதிவைப்பதெல்லாம் வாசிக்கப்பட்டுவிடும் நிலையிலுள்ளதா என் எழுத்து?

*
Continue reading

வந்தாயிற்று, போய்…

வந்தாயிற்று

அடுத்து ஓர் பிறப்பு, அடுத்து ஒர் மரணம்
அடுத்தும் பிறந்து, கருப்பையில் உறக்கம்
இதுவே சம்சாரம், முடிவிலா சாகரம்
கிருபையில் திளைக்க, முராரியை துதிக்க

கவிதைகள் எழுதப்படுகின்றன
அதன்பின் படிக்கப்படுகின்றன
படிக்கப்பட்ட விஷயங்கள் மீண்டும் எழுதப்பட்டு
படிக்கப்படுகின்றன.

சரிதான்,
வருவதற்கு முன் உயிருடன் தப்பமுடியவில்லை
வந்துவிட்ட பின் என்ன செய்ய?
உயிருடன் விடுதலையில்லை.

மொத்தத்தில்
சொல்லிக்கொள்கிற மாதிரி ஒன்றும் இல்லை
போய்வருகிறேன், போய்
வரலாம்

கங்குல் வெள்ளம் கடலினும் பெரிதே

கல்லூரியில் உடன் படித்தவள் நேற்று மதியம் இறந்துவிட்டாள். பத்து வருடம் முன்னர் கீமோவில் போயேபோச்சு என்றிருந்த கான்சர் கடந்த மாதங்களில் ரிலாப்ஸ். கொண்டுபோயேபோச்சு.

கிட்டத்தட்ட இருபது வருடம் கழித்து, சென்ற வருடம் சந்திக்கையிலும் களையான முகத்துடன் இனிமையாக அமைதியாக பேசினாள். இருபது வருடம் முன்னர் “உன் அழகின் ரகசியம் பீமபுஷ்டி லேகியம் தானே” என்பது போன்று ஏதோ கடலை வறுத்திருப்பேன். கிளரொளி இளமை. சென்ற வருடம் சந்திக்கையில் அவ்வாறே பேசத் தயக்கம். டக்-இன் செய்த முழுக்கை சட்டை பேண்டினுள் அல்லவா இருக்கிறேன். தலையை வருடி சௌக்கியமா என்று கேட்கவே தோன்றியது. அதையும் செய்யவில்லை.

ஹாய் என்றவளிடம், வாயிலிருந்த பாராட்டை எச்சிலுடன் விழுங்கி, ஹாய், … எங்கிருக்கிறாய் இப்போது? மாரீட்? (யெஸ், உனக்கே ஆய்டுத்து எனக்காகாதா) என்றெல்லாம் ஆண்மையின் திடம் பரிமளிக்க கேள்விகளால் அளவளாவி, நான் இப்போது வசிக்கும் ஊரில், சொற்ப கிலோமீட்டர்கள் அருகிலேயே இருக்கிறாள் என்றும் தெரிந்துகொண்டேன். எப்படியும் யூஸ் பன்னமாட்டோம், மறந்த்ருவோம் என்றபடி, மொபைல் எண்கள் பறிமாறிக்கொண்டு அகன்றோம்.
Continue reading

இன்றைய மௌனம்

சென்ற வாரம் பெங்களூரில் ஒரு விருந்தினர் மாளிகையில் காலைக்குளிரில் தும்மல்களுடன் துயிலெழுந்து எரியும் கண்களுடன் பூர்வா சந்தியா ப்ரவர்ததே என்று மடினியை உயிர்ப்பித்து…  கடலூர் சீனு அவருள்ளிருந்து வார்த்தைகளாக்கியுள்ள என் சக மானிடன் செயலாக்கிய அவலத்தை, அடிமை மானுடத்தை (http://www.jeyamohan.in/?p=23200 — மென்மனதுடையோருக்கு எச்சரிக்கை) மனத்தளவில் அனுபவித்தேன்.

ஒருமுறை ஆஸ்பத்ரியில் ரத்தவாடை கலந்த பெண்டத்தால் வாசனையில் தலைசுற்றியதை தவிர்த்து, அதிர்ச்சியில் சட்டென மயக்கிவிழும் தருணத்தை திரையில் ப்ராணநாதா என்றிருப்போரிடமே அநேகமாக கண்டிருந்தேன். விழுப்புரம், கடலூர் என்று நான் சென்று பழகிவந்துள்ள சொந்த ஊரிலேயே சீனு விவரித்துள்ள குரூரத்தை வாசிக்கையில், மடினியிலிருந்து விடுபட்டு மீண்டும் படுக்கைக்கு வந்துவிட எழும்புகையில் தலைசுற்றி சேரிலேயே உட்கார்ந்துவிட்டேன். மயக்கமோ என கண்ணைமூடியதும் கன்னத்தில் வழிந்தோடும் உஷ்ணம் என் அன்றைய காமத்தை தீய்த்தது. கையறுநிலையை பறைந்தது.
Continue reading

கற்க கசடற

சொல்வனம் இதழில் வெளியாகியிருக்கும் கட்டுரையை ஒரு மினி அறிமுகத்துடன் இங்கு மீள்பதிவாக்குகிறேன். ஈஸிசேரில் சாய்ந்தபடி நாளைக்கு இந்நேரம் நாற்பது வயதாகிவிடுமே, இவ்வுலகில் தங்கும் அவகாசத்தில் அநேகமாக பாதி முடிந்துவிட்டதே, தாத்தா வீடு, ராமாயணம், குஞ்சாலாடு, ஸ்ரீதேவி, திருட்டு தம், கிட்டார், மீன் வறுவல், இயற்பியல் என்று எதையுமே நாம் நினைத்தவகையில் அனுபவிக்கமுடியவில்லையே என்று கண்விழித்து சொப்பனம் கண்டு சற்றே அசர, ஜான் லெனனின் கிரானீ கிளாஸஸுடன் சாக்பீஸ் தூள் பறக்க போர்டெல்லாம் ஈக்குவேஷனாக ரிச்சர்ட் ஃபெய்ன்மேன் வேஷத்தில் இயற்பியல் பாடம் நடத்திக்கொண்டிருக்கையில், டார்லிங் லஞ்ச் மறந்துட்டீங்களே என்று கையில் குஞ்சாலாடோடு வந்த ஸ்ரீதேவி காற்றில் கரைய, விழித்துக்கொண்டேன்.

ஏமாற்றத்தில் ஈஸிசேரில் வெகுண்டெழுந்து நெற்றிக்கண்ணை விரலால் அழுத்த, இதெற்கெல்லாம் காரணம் நீ இன்னமும் தமிழில் ஒரு அறிவியல் கட்டுரை எழுதாததே என்று ஞானோதயம். துயிலாத மடினியை தொப்புள் பட்டனில் அமுக்கி எழுப்பி, தட்டுத்தடுமாறி  தட்டெச்சி, யாரிடமும் ஸ்பெல்லிங் அர்த்தமெல்லாம் கேட்காமல் நானே என் சொந்த முயற்சியில், ஸ்ரீதேவி கிடைக்காத கடுப்பில், தெருநாயும் துயிலும் ஒரு ப்ரம்ம முகூர்த்தத்தில் எழுதியதே பின்வரும் கட்டுரை. இவ்வகை நடை உடை பாவனையில் அடிக்கடி எழுதமாட்டேன் என்று உத்திரவாதமளித்தால் படித்துவிடுவீர்கள்தானே?

அடுத்த பத்தி நெடிது. அனைத்து வாக்கியங்களும் கேள்விகள். ஒரு ஓய்வு நாளில், சாய்நாற்காலியில் கிடந்து, என்னைச் சுற்றி இயங்கும் ஊடகங்கள், பொருட்கள் சிந்தனைகளை வைத்து  பத்து நிமிடத்தில் என்னால் எழுப்பமுடிந்தவை (நேர்த்தியாக மடினியில் தட்டச்சுவதற்கு அரைமணிக்குமேல் பிடித்தது). எனது நல்வாழ்விற்கு பதில் தேவையான கேள்விகளின் தொகுப்பு. படித்துப்பாருங்களேன்.
Continue reading

திசை கண்டேன் டக்ளஸ் ஆடம்ஸ் கண்டேன்

சற்று தீவிர சண்டமாருத வாத்தியார் பக்தர்களோ இருதயம் பலஹீனமானவர்களோ இதற்குமேல் இதை படிக்கவேண்டாம். வாத்தியார் என்றால் சுஜாதாவா என்று டவுட் கேட்பவர்கள் நிச்சயம் படிக்கவேண்டாம். மற்றபடி கேளிக்கை இலக்கியங்களைப் பற்றி தமிழாங்கில மொழிச்சிதைவுகளினால்  அனுபவக்கருத்துப்பரிமாறமுனையும் ஜாலி கட்டுரையே. பொதுஜன வாசிப்பிற்கு உகந்தது.

சில மாதங்களுக்கு முன் பதிப்பக நண்பர் வாத்தியாரின் திசை கண்டேன் வான் கண்டேன் (இனி தி.க.வா.க.) விஞ்ஞானபுனைவை தங்கள் பதிப்பகம் மறுபதிப்பித்துள்ளதாகவும், அதில் வரும் ரோபோ (கதையின் 121 விண்வெளிக்கப்பல் உலகில் பாதுகாப்பாக இயங்க, வேண்டிய மனித உருவெடுத்துவிடும்) செய்யும் அட்டகாசங்களைத்தான் அரசியல்சரியாக எந்திரப்படத்தில் கொடுத்துள்ளார்கள்; ”வாத்தியார் வாத்தியார்தான்” என்று என்னுடன் ரசித்துக்கொண்டிருந்தார்.

என்னிடம் இருக்கும் தி.க.வா.க. திறந்தாலே 1993 வருட தூசியில் தும்மவைக்கும் ஒரிஜினல் விசா பதிப்பித்தது . ஆமாம் ஜாலி கதைதான். வாத்தியாரின் நடையும் கற்பனையும் அஸுஷுவல் பிரமாதம். ஆனால் நல்ல விஞ்ஞானப்புனைவு என்று சொல்லமாட்டேன். அதில் வரும் பல ஐடியாக்கள் சாதா அறிவியல்படியே ஓட்டை. அத்தோட முக்கியமா அக்கதையில் வரும் மெயின் ஹீரோ, கதை களம் போன்றவை ஆங்கில கதையின் மெல்லிய தழுவல் என்றதும், பதிப்பக நண்பர், டேய், வழக்கம்போல கலாய்க்றயா, நெஜமா?
Continue reading

கடவுள் செயல்?

விபத்திலிருந்து தப்பிப்பிழைத்த கிருஷ்ணன் மேங்களூர் ஆஸ்பத்திரி வார்டிலிருந்து தான் பிழைத்ததைப் பற்றி கூறுகிறார்:

யோசிக்கிறேன், ஏன் நான் மட்டும் என்று. எனக்கு தோன்றுவது கடவுள் எனக்கு மறுவாழ்வை கொடுக்க நினைத்துள்ளார்…

விபத்திலிருந்து பிழைத்தது கடவுள் செயல். அப்போ 160க்கும் மேற்பட்ட சக பயணிகளை சாகடித்த விபத்து?

அவருக்கு மட்டும் மறுவாழ்வளிக்க அநேகரை சாகடிக்கும் கிருஷ்ணனின் கடவுள் இவ்வளவு குரூரமானவரா?

ஒலி-கடிக்காக (சௌண்ட் பைட்) அடிபட்டு ஆஸ்பத்திரியில் படுத்திருப்பவர் மனநிலை எப்படி இருக்குமோ என்றும் பார்க்காமல் பேட்டியெடுக்கும் ஊடகங்களை சொல்வதா, இல்லை பிழைத்திருந்தாலும், உணர்ச்சிவசத்தில் சக இறந்தவர்களின் உற்றார் உறவினர்கள், பேப்பர் படிக்கும் என்னைப்போல் சிலர் தம்மைப்பற்றி என்ன நினைப்பர் என்று யோசிக்காமல் இதுபோல ஏதாவது சொல்லிவிடும் பிழைத்தவரை சொல்வதா.

அநேக அப்பாவிகளை சாகடித்த விபத்து, மனிதன் செயல். சிலர் பிழைத்தது, குருட்டு அதிர்ஷ்டம்.

கடவுளே, மனித செயல்களிலிருந்து மனிதனைக் காப்பாற்று.

நேனோ ஓவியம் அறிவியலை வளர்க்காது

தாஜ்மஹால் பார்த்திருக்கிறோம். அரிசியில் தாஜ்மஹால் பார்த்திருக்கிறோம். கலைஅரிசி என்று மைக்கேல்மதனகாமராஜனில் கிரேசிமோஹனால் சிலாகிக்கப்பட்ட ஓவியக்கலை. பார்க்க பூதக்கண்ணாடி வேண்டும். அந்த ஓவியங்களையும்விட சிறிதான, நேனோ ஓவியங்கள் பார்த்திருக்கிறீர்களா. ஒரு சாம்பிள் பாருங்கள்.


Continue reading

ஆராய்ச்சி முடிவு

அறிவுமஹாசமுத்திரத்தினில் தெறிக்கும் திவலைகளில் திளைக்கும் என் ஆராய்ச்சிகளினால் மனிதத்திற்கு என்ன பயன்? பெற்றார் சுற்றாருக்கு புரிவதில்லை. உற்றார் உறவினர் முகத்தில் சலனமில்லை. ஆராய்ச்சிமுடிவினால் நிறுத்தும் ஆட்டோவில் என் கட்டணம் குறையவில்லை. கச்சா எண்ணை பற்றாக்குறை தீரப்போவதில்லை. உலகளாவிய சூடேற்றம் குறையப்போவதில்லை. உலகமோ உச்சியோ குளிரப்போவதில்லை. அறிவியலாளர்கள் என்று பறைசாற்றும் இந்த மேட்டிமைவாத மெருகூட்டல்களினால் என்னைவிடுத்து தனியொருவனுக்கு உணவுகிட்டப்போவதில்லை. ஜெகத்தினை அழித்திடவுமில்லை. சாதித்த தனிமையிலும் இனிமை காண இயலவில்லை.

எவ்வகை விளிம்புகளையும் எட்டாத, புதிர்களை விடுவிக்காத, புரிதல்களை மேம்பிக்காத என் ஆராய்ச்சி என்ற இந்த முக்கியானுஷ்டானத்தில் இவ்வாறு நியூட்டனின் புத்தகத்திற்கு பள பள அட்டைபோடுவதினால் என்ன பலன்? கிட்டப்பார்வையின் உற்றுநோக்கலில் சக ஆராய்ச்சியாளர்களின் அங்கீகரிப்பு பரிந்துரைகளில் எனக்கு ஒரு ஆராய்ச்சி கட்டுரை வெளியாகிறது. இதைவைத்து சிலகாலம் சிலரை ஏய்க்கலாம். பலமுறை பலகாலம் செய்தால், பலரை ஏய்க்கலாம். பொறாமை அஜீரணத்தில் சிலரை ஏப்பம் விடவும் வைக்கலாம். மிஞ்சினால், என்னைப்போல் வெப்பம் சார்ந்த அறிவுச்சலனங்களில் நாட்டமுள்ள கும்பலுக்குள் ஒரு ஜான் உயரமாகலாம்; சில மணித்துளிகளுக்கு. பிறகு சலனங்களின் கொந்தளிப்பில் இயற்கையாக வேரொருவர் எ(ழு)ம்புவார். தன்னிச்சையாக எனக்கு ஏப்பம் வரும்.
Continue reading

தசாவதாரமும் கெயாஸ் தியரியும்

தசவதாரத்தை பற்றி பக்கத்து ப்ளாகில் புழங்கும் நாய்குட்டிவரை அனைவரும் விமர்சித்தாகிவிட்டது. நூறாவது நாள் விழாவில் கமல் சொல்வதை பிரித்தெடுக்க தயாராகி வருகையில் சாவதானமாக இன்னொரு விமர்சனக் கட்டுரையா என்றால், படத்தை இப்பொதாங்க நான் பார்த்தேன். இன்னமும் ஓடிக்கொண்டிருப்பதே இந்த கமல் படத்தின் வெற்றி. பலர் தொடாமல் விட்ட சிலதைமட்டும் குறிப்பிடுகிறேன்.

முதலில் கெயாஸ் தியரி. Continue reading

வாத்தியார்

என தொழில் வெப்பமும் வெப்பம் சார்ந்த விஷயங்ளை பற்றியும் சிந்தித்து, ஆராய்ந்து, தெளிந்து (சில வேளை தெளியாமலே) மற்றவருக்கு அதை புரியவைக்க முனையும் பகுதி நேர விஞ்ஞானி, பகுதி நேர வாத்தியார் வேலை.

வேலை செய்யும் நிறுவனத்தின் ஆராய்ச்சிக்கூடத்திற்கு மிக அருகிலேயே வீடு வைத்து, லாபிலேயே இருப்பதால் அவ்வீட்டிற்கு சொற்பநேரமே விஜயம் செய்து, போதாகுறைக்கு அதில் நிறய புத்தகங்களை வைத்து, ஞானாணந்தமயம்தேவம் சொல்லி ஸரஸ்வதி பூஜை தினத்திலும் அவற்றில் சிலதை பிடிவாதமாக படித்து, அலமாரி நிறய பத்தாவதிலிருந்து எழுதிய கணக்கு நோட்ஸ் முதல் பல கோணங்களில் ஆரம்பித்து பாதியிலேயே முடிந்துவிட்டிருக்கும் நேற்று எழுதிய நோட்டுப்புத்தகங்கள் வரை நிரப்பி, அவற்றின் அடித்தல் திருத்தல்களை மனதிற்கொள்ள முயன்று், இரண்டு மூண்று கம்புயுட்டர்கள இருத்தி விளயாடி், எப்பொழுதும் சற்றே எரிச்சலுடனும் அவ்வெரிச்சலுக்கு காரணகர்தா அடியேன்தான் என்பதை மறைக்கும் மிகுந்த பாசத்துடன உலவும் மனைவியின் மேல் அவ்வப்போது முட்டிக்கொண்டு, நெருப்பு நிஜமாகவே சுடுமா என்று அதில் விரலை விட்டு பார்க்கும் என்னை விஞ்ஞானி என்று ஐயம் திரிபட ஒத்துக்கொள்வதில் என்னை சுற்றி இருப்பவர்களுக்கு தயக்கம் இருப்பதாக நான் நினைக்கவில்லை.

நான் வாத்தியார் என்பதில்தான் பிரச்சினை இருப்பதாக தெரியவருகிறது.
Continue reading