சொல்வனம் இதழில் வெளியாகியிருக்கும் கட்டுரையை ஒரு மினி அறிமுகத்துடன் இங்கு மீள்பதிவாக்குகிறேன். ஈஸிசேரில் சாய்ந்தபடி நாளைக்கு இந்நேரம் நாற்பது வயதாகிவிடுமே, இவ்வுலகில் தங்கும் அவகாசத்தில் அநேகமாக பாதி முடிந்துவிட்டதே, தாத்தா வீடு, ராமாயணம், குஞ்சாலாடு, ஸ்ரீதேவி, திருட்டு தம், கிட்டார், மீன் வறுவல், இயற்பியல் என்று எதையுமே நாம் நினைத்தவகையில் அனுபவிக்கமுடியவில்லையே என்று கண்விழித்து சொப்பனம் கண்டு சற்றே அசர, ஜான் லெனனின் கிரானீ கிளாஸஸுடன் சாக்பீஸ் தூள் பறக்க போர்டெல்லாம் ஈக்குவேஷனாக ரிச்சர்ட் ஃபெய்ன்மேன் வேஷத்தில் இயற்பியல் பாடம் நடத்திக்கொண்டிருக்கையில், டார்லிங் லஞ்ச் மறந்துட்டீங்களே என்று கையில் குஞ்சாலாடோடு வந்த ஸ்ரீதேவி காற்றில் கரைய, விழித்துக்கொண்டேன்.
ஏமாற்றத்தில் ஈஸிசேரில் வெகுண்டெழுந்து நெற்றிக்கண்ணை விரலால் அழுத்த, இதெற்கெல்லாம் காரணம் நீ இன்னமும் தமிழில் ஒரு அறிவியல் கட்டுரை எழுதாததே என்று ஞானோதயம். துயிலாத மடினியை தொப்புள் பட்டனில் அமுக்கி எழுப்பி, தட்டுத்தடுமாறி தட்டெச்சி, யாரிடமும் ஸ்பெல்லிங் அர்த்தமெல்லாம் கேட்காமல் நானே என் சொந்த முயற்சியில், ஸ்ரீதேவி கிடைக்காத கடுப்பில், தெருநாயும் துயிலும் ஒரு ப்ரம்ம முகூர்த்தத்தில் எழுதியதே பின்வரும் கட்டுரை. இவ்வகை நடை உடை பாவனையில் அடிக்கடி எழுதமாட்டேன் என்று உத்திரவாதமளித்தால் படித்துவிடுவீர்கள்தானே?
அடுத்த பத்தி நெடிது. அனைத்து வாக்கியங்களும் கேள்விகள். ஒரு ஓய்வு நாளில், சாய்நாற்காலியில் கிடந்து, என்னைச் சுற்றி இயங்கும் ஊடகங்கள், பொருட்கள் சிந்தனைகளை வைத்து பத்து நிமிடத்தில் என்னால் எழுப்பமுடிந்தவை (நேர்த்தியாக மடினியில் தட்டச்சுவதற்கு அரைமணிக்குமேல் பிடித்தது). எனது நல்வாழ்விற்கு பதில் தேவையான கேள்விகளின் தொகுப்பு. படித்துப்பாருங்களேன்.
Continue reading →