ராமுவும் சோமுவும்

(பேயோன் தூண்டலில், குழந்தைகளுக்கான கதை)

ராமுவும் சோமுவும் உயிர் நண்பர்கள். ஒரு நாள் இருவரும் காட்டு வாக்கில் நடந்துகொண்டிருந்தனர். அப்போது ஒரு பயங்கர கரடி எதிரில் வந்தது. இருவரும் பயந்து ஓடத் துவங்கினர். கரடி அவர்களை விடாமல் துரத்தியது. ராமு நண்பனை விட்டு ஒரு மரத்தின் மீது ஏறித் தப்பித்தான். சோமுவிற்கு மரம் ஏறத் தெரியாது. அவனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. கட்டாந்தரையில் படுத்துக்கொண்டு இறந்தது போல் நடித்தான். கரடி அவன் முகத்தருகே முகர்ந்து பார்த்தது. பசியாற அவனைக் கடித்துத் தின்றது. மரத்தின் மீதிருந்த ராமுவைப் பார்த்து, “செத்த மாமிசத்தை நான் சாப்பிட மாட்டேன் என்று ஊரில் எவன் உளறியது?” என்று கேட்டுவிட்டு அகன்றது.

சிறுகதை: எட்டணாவிற்கு உலக ஞானம்

அன்றொருநாள் கோலி சோடா குடித்தபடி ஞானத்தேடலில் மூழ்கியிருந்தேன்.

ராஜகோபுரத்தை பார்த்து சிரிக்கும் உலோக காந்தியின் பின்புறம், செல்வா கடை திருப்பத்தில் பஸ்கள் வரிசைக்கிரமாய் ஆக்கிரமிக்கும். அதுதான் எங்களூர் பஸ் ஸ்டாண்ட். கடை வாசலில் காரை பெயர்ந்து முனையில் செங்கல் தெரியும் சிமெண்ட் திட்டின் மீது ஜீன்ஸ் பாண்டில் குதிரைவாகன போஸில் வீற்றிருந்தேன். ஒரு கையில் கோதண்டம் என கோலி சோடா. தொடையில் மடக்கி ஊன்றியிருந்த மறு கையில் இறுமாப்பு. கடையில் வெற்றிலை போடுபவர்களின் நடுவிரல் வெண்சுண்ணம் தீற்றியிருந்த மடிந்த மரக்கதவுகளின் மீது சாய்ந்து, சிந்தையில் உலகஞானத்தை செரிக்க, செல்வாவிடம் கணக்கு சொல்லி வாயில் கோலிசோடாவை வழியவிட்டிருந்தேன்.
Continue reading

சிறுகதை – கதவை திறந்து பார்த்தால்

ப்படியும் இன்று பெட்டியைத் திறந்து பார்த்துவிடவேண்டும்.

என்னத்தான் இருக்கும் உள்ளே? எப்படித்தான் இருக்கும் அவ்வுலகம்?

இருட்டாய் இருக்கும், கண் சரியாய் தெரியாது, துழாவ வேண்டும். இருப்பது ஆபத்து என்று உணர்ந்தால் பெட்டியை விட்டு விலகி ஓடிவிடு. எத்திசை என்பது முக்கியமில்லை. நெடிய கால்கள் கொடுக்கும் வேகத்தில் ஓடிவிடு. பெரிய மீசை பத்திரம்.

பாட்டன் முப்பாட்டன் காலத்திலிருந்தே என் குலத்தாருக்கே பெரிய மீசை. அமேரிக்கா, ஆப்பிரிக்கா என கண்டமெட்டிலும் வேரின்றி காலூன்றினாலும் மீசையைக் களையோம். ஸ்டார்பக்ஸில் டாலர் காபியை முகர்கையிலும், நடுத்தரவர்க ஜீன்களுக்கென்றே பிரத்யேக மெக்ஸிகன் டாக்கோ பெல்லின் என்சிலாடாக்களை வாயெல்லாம் சீஸ் வழிய புசிக்கையிலும், இடர்படும் மீசையை மழியோம். என் சொந்த கிராமத்திலும் இவ்வாறே. தேவர் மகனென்ன, அத்தைக்கே மீசை முளைக்கும் எங்கள் குலத்தில், தேவரின் தெய்வத்திற்கும் மீசை உண்டு.
Continue reading

சுவர்களுடன் பேசியவள், ஆனால்…

ஒரு ஊரில் ஒரு மாமியார் வாழ்ந்தாள். ஆனால் அவள் குறைகளை யாரிடமும் சொல்லமுடிவதில்லை.

அவளுக்கு இரண்டு மாட்டுப்பெண்கள். இரண்டு பிள்ளைகள். இரண்டு கைகள். இரண்டு கால்கள். ஆனால் மொத்தம் இருபத்தியொரு விரல்கள்.

மாட்டுப்பெண்கள் அவளை படுத்தினர். பிள்ளைகள் உதாசீனப்படுத்தினர். ஆனால் அவள் நான்கு வைர மோதிரங்கள் அணிந்திருந்தாள்.

கணவன் இருந்த காலங்களில் ஊரில் கோப்யமாக வாழ்ந்தவள் வாயைத்திறந்து பிறரிடம் குறைபட்டுக்கொள்வதே தெரியாது. ஆனால் அவள் மறுமணம் புரிந்துகொள்ளவில்லை.
Continue reading

கொளை கதை – பின்னுரை

கொளை கதையை தொடர்ந்து படித்த அனைவருக்கும் நன்றி. நேரில் இதுவரை பார்க்காமலே, டுவிட்டரில் கதையை எழுதத்தூண்டிய @narain இணையத்தில் படித்து அவ்வப்போது உற்சாகம் கொடுத்த @orupakkam @scanman @isr_selva @icarusprakash மற்றும் பலருக்கு நன்றி.

சுயதம்பட்டம் என்று நினைக்காவிடில் ஒரு பின்னுரை. இது அப்ஸர்ட் ஜானரில் (absurd genre),  மல்டி லேயர், எனும் பல்படிமக் கதை. துப்பறியும் மனித கொலைகள், தமிழ் கொளைகல், எழுத்து க்ளீஷே-கொலைகள், (அறிவியல்) மொழியாக்க கொலகள், திரைப்பட கொலைகள், இப்படி பல படிமங்கள். கதையில் வரும் பாத்திரங்கள், சம்பவங்கள் யாவையும் எங்கோ, என்றோ, நடந்த உண்மையே. மேம்போக்காகத் தெரிவது எதுவும், சற்று யோசித்தால் அதுபோல் இருக்காது.
Continue reading

ஒரு கொளை கதை – பாகம் 12

கண்விழித்தபோது எட்டாம் நம்பர் வார்டே பெண்டத்தால், புஷ்பம் கலந்த  நாற்றமாய் இருந்தது. நாற்றம் என்றால் நறுமணம். கற்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ நாச்சியார் திருமொழி வகை நாற்றம். டேப்பில் அபிராமி அந்தாதி. என்னடா குணமாக்குறதுக்கு பதில், குணாவாக்கிட்டான்களா…

ஹலோ, மார்னிங்…

அருகில் ரோஜா நாற்றத்தில் டாக்டர் சாகடிக்காத கோஷ். வாழ்வளிக்கும் கோஷ். இளமை ஜோஷ். தேவையான வாளிப்புகளை வெள்ளை ஏப்ரனில் மறைத்து, கழுத்தில் தங்க ஸ்டெத் தொங்க (கணவர் பம்மல் சம்பந்தம் கொடுத்ததாம்), இளமையாய் சிரித்து, முதுமையாய் குனிந்தாள்.

மீண்டும் சிலிக்கன் வாலி.
Continue reading

ஒரு கொளை கதை – பாகம் 11

சலூன் டி பாரீஸ். ஐந்து நட்சத்திர ராட்சஸகேளிக்கையின் வயிற்றில் முன்பசிக்காக கட்டிய லவுன்ஜில் அஜீரணமாய் இருக்கும் முடிதிருத்தகம். இங்கு அமர்ந்த திருக்கோலத்தில் பேச்சுலர் பலர். வீட்டில் பேச்சு இல்லாதவர்.

இதன் சலூனிஸ்ட் லோக்கல் பார்ட்டி. கத்திரியும் கையுமாக, முறுக்கான பாடி. முகத்தில் தாடி. நெற்றியில் பட்டை. கழுத்தில் ருத்திராக்‌ஷ கொட்டை. சலூனிஸ்ட் பேண்ட் போடுவான். ஜிப் போடுவான். சட்டை நடு இரண்டு பட்டன் மட்டும் போடுவான். மிச்ச சட்டையை கீழே முடிச்சுபோட்டிருப்பான். மேலே மார்ப்பின் உள்ளும் புறமும் தெரியும்படியாக உலாத்துவான். நாரீமணிகள் கிறங்குவர்.

மதுரை வீரன் எம்ஜீயார் போல ப்ளாக் அண்ட் வைட்டிலேயே வழு வழு தொடை மினுக்கித் தெரியும் குட்டைப்பாவாடை அணிந்து, நுணிநாக்கு ஆங்கிலம் பேசி, பார்க்க நன்னாக, சாரி, நன்றாக இருக்கும் யுவதிகள் சலூனிஸ்ட் விரிக்காத வலையில் விழுவர். இவன் கைத்தாங்கலாக வீடுவரை கூட்டிச்செல்வான். தன் வீடுவரை.

மறதி அதிகம்.
Continue reading

ஒரு கொளை கதை – பாகம் 10

வாங்ஸ் கிச்சன். வேண்டாத இடங்களில் பளீரென்று வெளிச்சங்கள். வேண்டிய இடங்களில் சுவற்றில் அழுக்கை மறைக்க. ஆங்கிலம் பேசும் சர்வரிடம் லொடபடவா ஒரு ப்ளேட் ஆனியன் ரிங்ஸ், ரெண்டு கப் காப்பி என்றான்.

நடந்த காரணம்புரியாத கொளைகலின் துப்பேதும் துலங்காமல் எனக்கு இருந்த வெறி லொடபடவாமேல் திரும்பியது. ஏண்டா, தமிழ் தமிழ்னு சொலினுகுர. ரெண்டு கப் காப்பிங்கற. ரெண்டு கப் காப்பிகள் அப்டினு சரியா சொல்லு. வாரினேன் அவனை.

லொடபடவா கெட்டிக்காரன். அப்படியே பார்த்தாலும் ரெண்டு கப்கள் காப்பி அப்டினுதான் சொல்லனும்.

தொங்கிப்போனேன். எங்கேந்துறா உனக்கு இதெல்லாம் தெரியுது? அப்பாவா, தாத்தாவா, யார் கத்துகொடுத்தாங்கடா இத?

இல்லை. இது அப்பாவின் ஒன்றுவிட்ட நண்பர். பெயர், கந்தசாமி பிள்ளை. அவருடைய அப்பா என் தாத்தா வடுவூர் சாமித்துரைக்கு அவ்ளவா ஆகாது.
Continue reading

ஒரு கொளை கதை – பாகம் 9

ராச்சாண்டார் திருமலை இருட்டான பப்ளிக் நூலகம். இங்கு படித்து சிலர் மேதாவியாகி உள்ளனர். எம்பி பிஎஸ், எம்பி ஏ என்று தாவி தாவி ஆன மே(ல்)தாவி. பலர் இன்னமும் மேலும் கீழும் தாவிக்கொண்டிருக்கின்றனர். வேறு யாருக்கும் தெரியாமல்.

ஓரத்தில் மண்குவித்து, புதைக்கப்பட்டிருக்கும் மண்பானை. உள்ளே கலங்கலாக ஜில்லென்று ஜலம். பக்கத்தில் சங்கிலியில் கைதாகி ஜன்னல் கம்பியில் தொங்கும் அலுமினிய டம்ளர். வருகை பதிவு ஏடு. அருகில் புழுக்கூண்டு ஒரு பென்சில். யாரும் திருடிக்கொண்டு சென்றுவிடாமல் இருக்க நூலில் மூன்று முடிச்சு போட்டு லெட்ஜரின் கழுத்தில் தொங்கும். வெளிச்சமான ஜன்னல் அருகே நாளிதழை பெஞ்சில் பிரித்து வைத்து கவிந்திருக்கும் பல செல்ல தாத்தாக்கள். படிக்கும் பேப்பரை கேட்டால் பலூன்காரனிடம் சீப்ரேட்டில் வாங்கியதோ என்று சந்தேகிக்கும் காதில் கட்டிய மூக்குக்கண்ணாடியில் கண்ணால் மேலும் கீழும் பார்த்துவிட்டு சற்று தாமதித்து மறுநாள்தான் தருவர்.
Continue reading

ஒரு கொளை கதை – பாகம் 8

சூலப்பொட்டுக்காரி. லிபர்டேரியன். ழ ள குழப்பத்தில் இன்று இரவு என்னை கொல்ல இருந்தவள். கிடந்தாள் தவம். மணந்தாள் என்னை. சாமியார் சொத்துக்காக. நா ஏதோ ராமனுக்காக ஜானகி இருந்த தவம் அப்டீன்னு நெனச்சுட்டிருந்தேன். சரிதான் போய்யா; என்னமோ அந்தப் பொண்ணு கொஞ்சம் சேப்பாயிருக்கு. நீ அதைப் பார்த்து மயங்கறே. சேப்பா இருந்தா ஆயிடிச்சா? லொடபடவா சொன்னது லேட்டாத்தான் புரிந்தது. ஆனால்… பெட்டர் லேட் தான் நெவர்…

அப்படி சற்று ரீவைண்ட் செய்தால், அன்று காலையும் செவ்வாய். மூன்றாவது கொலை நடந்த நாள். நான் அவைகள் கொலைதான் என்று ஊர்ஜிதம், சே, சரிபார்த்துக்கொண்ட நாள். செத்தது சாகடிக்கரா கோஷ். ழ ள குழப்பத்துல என்னை சாகடிக்க இருந்த கோஷ். இப்ப காக்கா வூஷ்.
Continue reading

ஒரு கொளை கதை – பாகம் 7

கதை: கொளை கதை. காலம்: முதல் அத்தியாயத்தில் இந்த கத தொடங்குவதற்கு முன், எப்பவோ. இடம்: நாகர்கோயிலாண்ட, எதுத்தாத்து திண்ணை. அவதானிப்பு: அறிவியல்.

திண்ணைகிட்ட போனப்ப, அங்கிருந்த ஒருத்தன் அறிவியல் பேசுவியா நீ அப்டின்னான். சயின்ஸ்தானே, பேசுவனே. புதுசா என்ன சொல்லேன். ஓ, ஒன்னு வந்திருக்கு. நானோ அப்டீன்னுட்டு. எலக்ட்ரான் ப்ரோட்டான் நியூட்ரான் சேந்தா ஆட்டம்னு சொல்லுவா. அணு. எங்க அக்கா பொண்ணு பேரு கூட அதான். ஒன்னுக்கு ஒன்ன சுத்தும். அணுவ இல்ல. நியூட்ரான், எலக்ட்ரான் அதெல்லாம். ரொம்ப சொன்னா நமக்கு தலய சுத்தும். இந்த புதுசா வந்துருக்கர நானோ பார்டிகிள், துகள்ங்கறது, அணுக்கு ரொம்ப கிட்டக்க. சின்ன சைஸ். அத திரவத்துல கரையாம கலக்கினா நமக்கு நானோஃப்லூயிட், நானோ திரவம் அப்டீன்னு ஒன்னு கிடைக்குமாம். அது எப்படி இயங்கும்னு கம்ப்யூட்டர்ல மாடல், மாதிரி பன்னிட்டிருக்காங்களாம். போன வாரம் குமுதத்துல பிகினில(யாவது) இருக்கற பிரியாமணி படத்தோட பாகங்கள்லாம் போட்டு அருமையா வியாக்கியானம் பன்னிருந்தாளே….
Continue reading

ஒரு கொளை கதை – பாகம் 6

[முன்கதைகள் சுருக்கம்: இது கொளை கதை. தலைப்பு சொல்லுதே. ஆனா நீங்க கொலை கதைன்னும் படிக்கலாம். ஆனா இதில் நடப்பது நிஜம். துடிக்குது புஜம். தகிட தத்திம்தத்திம்தகிட விக்ரோம்... கா...தூ... ஆனா ஒரு கதையான்னு தெரியல. இதுவரை நாலேமுக்கால் வருதாம். கூட்டி கொடுத்தவங்க சொன்னாங்க. ஐயோ, கூட்டினா எண்கள கூட்டுவதுங்க. இப்படித்தான் பத்திக்கு பத்தி, வரிக்கு வரி, சோபால கிடக்குற ரிமோட் மேல ஒக்காந்து டீவிய பாக்குற மாதிரி, சானல் மாரி, மாரி, கத முச்சூடும் ஒரே கொயப்பம். கொள கதன்னு சொல்லுதேன்ல. ஆனா லைட் ரீடிங். இலக்கியம்மாதிரி யார்வேனா படிக்க முடியாது. இது தவம். படிச்சா கலஞ்சுடும். ஆனா எங்கேந்து வேனா எழுதலாம். நேத்திக்கு, போன மாசம், பத்து வருடம் முன், சென்ற நூற்றாண்டு, இப்படி எங்கேந்து வேனாலும். ஆனா தமிள்லதான் எழுத, சே, எளுதனும். ஆனா எங்கேந்து எளுதினாலும் புரியும். தமிழ் சினிமா, சே, திரைப்படம் மாதிரி, சே, போல. என்ன ஆனா ஆனான்னு ஆட்டிகிட்டிருக்கேங்கறிங்களா. இந்த பத்தியிலேயே பத்து ஆனா, பத்தானா யூஸ் பன்னிருக்கேன். யாருக்கோ நேந்துகிட்டு. ஏன்னு சொல்லுங்க பார்ப்போம். ஏன்னா,
Continue reading

ஒரு கொளை கதை – பாகம் 5

ழ ள. இப்பக்கூட பாருங்க, வூட்ல இந்த கொல கதய எப்படி உங்களுக்கு எளுதி, ச, எழுதி புரியவைக்கறதுன்னு நான் ரேழியில ஓரமா இருட்டுல சுவத்த பார்த்து யோசனையில இருந்தேன். அம்மணி தளுக்கா என்னைய கடந்து வாசலுக்கு போகையில, என்ன இன்னிக்கு இருட்டு நிறம் மிக்க கருப்பாயிருக்கு, இதான் டார்க் மேட்டரா, அதான் இங்கன இருக்கே பின்ன ஏன் பிஸிஸிஸ்டுங்க இதக்காணோம்னு தேடிகிட்டிருக்காவ, அப்படினு ஏதொ மொணமொணத்துகினே போனாவ. அங்க சோழியாடும் தோழியாண்ட வளவள கலகலன்னு பேச்சு. ரைட்விங் லிபர்டேரியன். சூலம் மாதிரிதான் பொட்டு வைப்பாக. அவிங்க நிரம்ப படிச்சவிங்க. கொஞ்சமாத்தான் புரிஞ்சிப்பாக. பேர் சாகடிக்கரா கோஷ்.
Continue reading

ஒரு கொளை கதை – பாகம் 4

ஆன் த பாசிபிள் மோடிவ்ஸ் ஆஃப் க்ளீஷே கில்லர் மூவிங் ஔட் ஆஃப் டமில்நடூ. அலுவலகத்தில் உள்ளேமட்டும் சர்குலேட் செய்யப்படும் வம்பிகையின் ஒரு கட்டுரை தலைப்பு. நான் ஏளுதினதுதான், சே, எழுதியதுதான். மொத்தமும் அனுமானங்களே. எள்ளளவு உண்மை இருக்கலாம். துப்பு (கெட்ட) பொழப்புல இப்டி அனுமானங்களையும் ரூமர்ஸையும் நம்பித்தான் டைம புஷ்ஷனும். க்ளீஷே கில்லர் ஏன் என்ஆர்ஐயிடம் சென்றிருப்பார்? என் யூகம், சே, ஊகம் இது…

தமிழ்நாட்டுள்ளார ஏதோ ஒரு உலகிலேயே தலை சிறந்த கிராமத்தில் ஒரு லெவல் வரை தமிழ் ஊடகக்கல்வி படிச்சுட்டு, அப்புறம் இந்தியாவில எங்கையுமே தம் மூளைக்கு ஏத்த வேலபாக்கமுடியாம, அமேரிக்கா, கனாடா ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், மலேஷியா நாட்லலாம் போய் ஸாஃப்ட்வேரோ, அண்டர்வேரோ எதையோ மூளைய கசக்கி டிஸைன் செஞ்சுட்டு டாலர்ல வறுமையா நோட்ட எண்ணி தாய்நாட்டை நோக்கி பெருமூச்சு விட்டு தாம் தமிழ் படிச்ச பள்ளிக்கூடத்துக்கு வெள்ளை அடிக்க பணம் அனுப்பி, அது போய் சேர்ந்துச்சான்னு கமிட்டி போட்டு செக் செய்யராங்களே. பைந்தமிழ் கொளைகல் பலநடக்குதுன்னு அவிங்க ஒத்துக்கறாங்க என்ன. ஆனா என்ன, அவிங்களாலமட்டுதே கொளைய கண்டுகொள்ளமுடியும்னு நம்புதாங்க.
Continue reading

ஒரு கொளை கதை – பாகம் 3

அலைகடலோரம் அலைகள்மோத அகாலத்தில் அலங்கோலமாக அழகான அணங்கை, ஆடைவிலகி. இலைமறைகாய்போல. ஈக்கள்மொய்க்க. உயிரற்று. ஊக்குபிளந்து. எழில்தெரிய. ஏடாகூடமாக. ஐவர்கூடி. ஒருக்களிக்க. ஓடி. ஔவென்றுரைத்து ஃகுளில் அடக்கியிருந்த ரிவால்வரை கையில் எடுத்துக்கொண்டேன்.

பார்த்தவுடன் முதலில் கண்ணில் பட்டது அவளது கண்ணில்படக்கூடாதது. அறிவியல் தாண்டிய கவிதையான முரண்பாடு மனதை இன்ஸ்டண்டாய் கெடுத்தது. பீச் முழுவதும் சிலிக்கண்-டை-ஆக்ஸைடு. அதில் கிடப்பது இதுவரை உயிருடன் இருந்த இரண்டு சிலிக்கன் இம்ப்ளாண்ட்ஸ். நடுவில்… சிலிக்கன் வாலிக்காக அமெரிக்காவரை எதற்கு போகவேண்டும்…

ரிலாக்ஸ், கடமைக்கு நடுவுல கயமைக்கு இடம் கொடுக்காதே. அதட்டினேன் மனதை. அரைமனதுடன் கேட்டது.

குட்டை பாவாடை. கைக்குட்டை மேலாடை. தலைமுடி பாப். மற்றதெல்லாம் டாப். கனவுகளில் மிதந்து நிஜத்தில் செத்திருந்தாள்.

Continue reading

ஒரு கொளை கதை – பாகம் 2

உன்னைப்போல் மற்றொருவன். நான்தான். ஊருக்கு வெடிவைக்கையில் மட்டும் வெள்ளை சட்டையில் உலவுவேன். மற்றபடி ஜீன்ஸ் டீ-ஷர்ட். காப்பி கலரில்.

எனக்கு செய்யும் தொழிலே கருமம். பல ரகசிய சிநேகிதிகள். ரகசியம்னா, பூஸ்ட் இஸ் த சீக்ரெட் ஆஃப் மை எனர்ஜின்னு கபில்தேவ் மாதிரி அனைவருக்கும் தெரிந்த ரகசியம் இல்லை. எனக்கே எம்புட்டு சிநேகிதிகள்னு தெரியாது. அவ்ளோ ரகசியம்.

ஆரம்ப காலத்தில் போன்கால்கள் மட்டும் சிநேகமாக தேவைகளை சொல்லும். நான் செவிமடுப்பேன். அழகிய குமரிகள் தொலைக்கும் கொண்டை ஊசி, செல்லிடைபேசி மற்றும் நாய் ஃப்ரெண்ட், பாய் ஃபிரெண்ட் என்று பலதை துப்புதுலக்கி கண்டுபிடித்து தருவது என் வேலையாய் இருந்தது. நாளடைவில் தொழில் சூடு பிடித்து, டெலிபோன் பில் எகிறி, வைர்லெஸ் ஆகி பிறகு டெலிபோன்லெஸ் ஆகி, நேரடியாகவே சிநேகதிகளிடம் தொடர்புகொண்டேன். அவர்களது அழகிய கணவர்கள் வேறு தொடர்பு வைத்துள்ளனரா, அந்தப்பெண் நம் கஸ்டமரைவிட அழகா, டைகர் பாம் போட்டு கணவன்மார்களின் மார்பு சூடாகும்வரை உள்ளும் புறமும் தடவி விடுகிறார்களா… இப்படி மார்பு சைஸ்வரை அளந்து சொல்லவேண்டும். என் கஸ்டமர்கள் பலவேளைகளில் கஷ்டமர்கள்.

Continue reading

ஒரு கொளை கதை – பாகம் 1

பிரேதத்தை முதலில் பார்க்கையில் அது கொலை என்று எனக்கு உரைக்கவில்லை. அரைமயக்க நிலையில் இருந்த ’அதை’ பிரேதமா என்றே ஊர்ஜிதப்படுத்த முடியவில்லை. நான் கத்துகுட்டி. ஊர்ஜிதத்தையே ஜி யை விட்டொழித்து தெளிவான தமிழில், சிந்தித்து சரிபார்த்து நிருபணம் செய்துகொள்ளல் என்று பல வார்த்தைகளில் எனக்கு விளக்க தெரியாத வயது. அடுத்த வாக்கியம் எப்படி எழுதுவது என்று இதோ, இப்போது திணறுகிறேனே, அப்படித்தான் திணறினேன் அன்றும். பிரேதமா பொணமா என்று. கதையாய் தமிழில் எழுதினால் என் உயிருடன் முடிக்கமுடியுமா என்று.

சரி, கிடப்பது கிடக்கட்டும் கிழவிய தூக்கி அடுப்பில வைப்போம் என்று தொடங்கினேன்.

அன்று ஞாயிறு. இக்கதைக்கு கிழமை முக்கியம் இல்லை. சும்மா ஒரு பில்டப்புக்காக சொல்கிறேன். மறந்துவிடுங்கள். ஆனால் மேலே அடுப்பிலிட்ட கிழவியை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். கொளுத்துவோம் அவளை பிறகு. நமுத்துவிட்டது இப்போது விறகு.

Continue reading

மெட்ராஸ் பாசி

கஸ்டமர் இஸ் காட்

போர்ட் வச்சிருக்கோம் பாருங்க சார். என்ன வேணும் சொல்லுங்க.

உன் கடைல வந்து கத்திரிக்காய்யா வாங்குவாங்க. கார்யா, புக் பண்ண கார்.
Continue reading