நினைவோடை: பேராசிரியர் ஜாக் ஹோல்மன்

பேராசிரியர் ஜாக் ஹோல்மன் வெப்பவியல் துறையில் ஒரு முன்னோடி. உங்களில் சிலர் அறிந்திருக்கலாம், கேள்விப்பட்டிருக்கலாம். அவருடைய ஹீட் டிரான்ஸ்ஃபர், தெர்மோடைனமிக்ஸ் போன்ற வெப்பவியல் பாட புத்தகங்கள் கடந்த அறுபது வருடங்களுக்கும் மேலாக பொறியியல் மாணவர்கள் மற்றும் ஆய்வாளர்களிடையே மிகப்பிரபலம். மே 1, 2013 அன்று இயற்கை எய்தினார். நினைவாக, அவருடனான அனுபவங்கள் சிலவற்றை பதிவுசெய்கிறேன்.

முனைவர் பட்டப்படிப்பினூடே நான் பேராசிரியர் ஹோல்மனிடம் ஆசிரிய உதவியாளனாக நான்கு வருடம் (1998 – 2002) இருந்தேன். ஒரு முறை உராய்வு ஆற்றல் இழப்பு எவ்வகையில் (கார்களில் பொருத்தப்பட்டுள்ளவை போன்ற) என்ஜின்களில் செயல்படுகிறது என்பதை விளக்குவதாய் சொதப்பினேன். அத்தவறான விளக்கத்தினால் ஒரு சந்தேகம் வேறு அவரிடம் எழுப்பினேன். மௌனமாய் என்னை சில நொடிகள் கவனித்துவிட்டு, “நீ பதில் கண்டுபிடித்தால் சொல்” என்றார். அன்றிரவு யோசிக்கையில் என் தவறான விளக்கம் புரிந்தது. சந்தேகத்தின் விடையும் எனக்கே விளங்கிவிட்டது. மறுநாள் மன்னிப்பு கலந்த தயக்கத்துடன் அவர் அறையில் விவரித்தவுடன், “அட, நீயாகவே முயன்று ஒன்றை அறிந்துகொண்டுவிட்டாய் போலிருக்கிறதே” இறங்கியிருந்த கண்ணாடியின் மேலிருந்து ஊடுருவியது பார்வை. குறுநகையுடன்.
Continue reading

மகுடி இசையும் பாம்புச் செவியும்

[இத்தலைப்பில் 2009இல் ஒரு குறுங்கட்டுரை எழுதியிருந்தேன். சிலர் ஞாபகம் வைத்திருக்கிறார்கள். அதே தலைப்பைப் பார்த்தவுடன் ஏற்கனவே வாசித்ததுதானே என்று விலகிவிடலாம். 2012இல் பாம்புச்செவியைப் பற்றிய புதிய ஆராய்ச்சி முடிவுகள் வெளியாகின. இவற்றையும் கருத்தில்கொண்டு இங்கு கட்டுரையை முன்பிருந்து இரண்டுமடங்கு விரித்துள்ளேன்.]

மகுடி இசைக்குக் கட்டுண்டுதான் பாம்பு ‘படம்’  எடுத்து ஆடுகிறதா? இந்தக் கேள்வி நம்மில் சிலருக்கு இருக்காது. ஏனெனில் ‘ஆம்’ என்கிற பதிலில் அசைக்கமுடியாத நம்பிக்கை. எனக்குச் சிறுவயது முதல் இக்கேள்வியும் அதற்கான மேற்படி பதிலில் நம்பிக்கையின்மையும் இருந்தது. குடவாசல் பாம்பாட்டி மகுடி கொண்டு வர மறந்து ஒரு முறை பாம்புக்கூடையின் மூடியை திறந்து அதைவைத்து ஆட்டியே பாம்பை படமெடுக்கச் செய்தது முதல்.

இதனால் சிறுவயதிலேயே எனக்கு இதற்கு தீர்வு தெரிந்துவிட்டது என்று சொல்லமாட்டேன். இப்பொழுதும் ரேடியோவில் புன்னாகவராளி கேட்கையில் அப்படி இப்படி பார்த்துவிட்டு, காலை நாற்காலி மீது மடித்து வைத்துக்கொள்ளுவேன்.

சரி, அப்ப விடை என்ன?
Continue reading

அ[க]வியல்

“சண்டேனா இரண்டு இல்ல, ஞாயிற்றுகிழமை” என்கிற உபதலைப்பில் கொடுத்தால் வாசிப்பீர்கள்தானே.

*

இன்று சுவாரஸ்யமாய் சொல்ல எதுவுமில்லை. உபயோகமாய்ச் சொல்லவும் ஏதுமில்லை. பகிர அக்கப்போர்களும் கைவசமில்லை.

என்று மட்டும் எழுத்தில் சொன்னால், வாசிக்க சுவாரஸ்யமாகவோ, உபயோகமாகவோ, அக்கப்போராகவோ இருக்குமா?

இல்லை, எழுதிவைப்பதெல்லாம் வாசிக்கப்பட்டுவிடும் நிலையிலுள்ளதா என் எழுத்து?

*
Continue reading

குழலினிது யாழினிது என்பார்…

மீண்டும் மார்கழி இசை விழா. நடந்த கச்சேரிகளோ நூற்றிற்கும் மேல். அவற்றில் என்னால், நிர்பந்தக் கச்சேரிகள், ரிவ்யூ கச்சேரிகள், ரசனைகள், சோதனைகள், எதையும் ஒருமுறை, வருடம் ஒருமுறை, அயல் நாடு, வெளி மாநிலம், வாத்தியங்கள், வாய்ப்பேச்சுகள், கண் அயர, கால் அயர, வாய் மெல்ல, மனம் மகிழ, பார்வையிட, பாதியில் அகல, ஏஸி இல்லாத ஹால், பார்க்கிங் கிடைத்ததால், என்று பாகுபடுத்திய காரணங்களுடன் பலசரக்காய் தினத்திற்கு மூன்று நான்கு கச்சேரிகள் தாவியும், இரண்டு வாரங்கள் எடுத்த விடுப்பில் கேட்கமுடிந்தது நாற்பது சொச்சம். இதற்கே, இண்டியானா ஜோன்ஸ் ‘கிரிஸ்டல் ஸ்கல்’ படத்தின் ‘அறிவு அனைத்திற்கும் ஆசைப்படும்’ வில்லியின் மண்டைபோல் ஆகிவிட்டது எனதும். வெடிப்பதுதான் பாக்கி. வீட்டிற்கு திரும்பி, சில நாள் மௌனம். கலைய ஜாஸ் இசை. பத்தியச் சாப்பாடு. பி.ஜி.வுட்ஹவுஸ், நாஞ்சில் நாடன். இன்றுதான் சவுண்ட் கார்டன், கிங் க்ரிம்ஸன் என்று அன்றாட அரையிரைச்சல்களுக்குத் துணிந்துள்ளேன்.
Continue reading

புத்தகங்கள்: வாசித்தவை, வாங்கியவை

அதாவது, 2012இல் வாசித்தவை, 2013இல் வாங்கியவை. ‘வாசித்தவைகள்’ ஏற்கனவே உள்ளிட்டிருக்கும் பட்டியல் (2012 புத்தகக் காட்சியில் வாங்கிய புத்தகங்கள்) சேர்த்து, என்னுடன் சமீப வருடங்களில் புழங்கும் புத்தகங்கள். ‘வாங்கியவை’, நேற்று (சனவரி 12) 2013 புத்தகக் காட்சியில் வாங்கியவை. புத்தகக் காட்சி நடந்துகொண்டிருப்பதால், உங்களுக்கு உபயோகமாகலாம் என்று இச்சமயத்தில், ஓரிரு குறிப்புகளுடன் இவற்றை பட்டியலிட முனைந்தேன். உண்மை வேண்டுமெனில், இவ்வகையில் ‘பட்டியல்கள்’ எழுதுவது மிக எளிது; அதற்கேற்றபடி ‘தன்னிலை விளக்கம்’ கொடுக்கத் தெரிந்திருக்கவேண்டும். அவ்வளவே.

தன்னிலை விளக்கம்: இங்கும் மேலுள்ள சுட்டியில் பட்டியலிட்டுள்ளதுமான அனைத்து புத்தகங்களுமே என்னால் சில நேரங்களில் ரசிக்கமுடிந்தவைகளே. சிலபகுதிகளிலாவது, என்னை யோசிக்கவைத்தவையே, வைப்பவையே. நேற்று வாங்கிய, இனி வாசிக்கப்போவதும், அவ்வகையில் நிச்சயம் இருக்கும். தேர்வு என்று தரம் பிரிப்பது கடினம்; அது விமர்சகர்கள் வேலை. நான் வெறும் வாசகன். விமர்சகர்கள் பரிந்துரைகளை முழுவதுமாய் நம்பாத, நேரடியாக எனக்குப் புதியதாய் கிடைக்கும் எழுத்திற்கு காசுகொடுக்கத் தயாராய் உள்ளவன். எதையும் வாசிப்பேன்.

சாய்வு (சாய்சு) என்றால், கதைகளைவிட கட்டுரைகளையே விரும்புவேன். நாவல்கள் பெரிதாக இருக்கவேண்டும். சிறுகதைகள், ஒரே எழுத்தாளரின் தொகுப்புகளாய். எவ்விதமான நகைச்சுவையும், எவ்விதமான ‘இலக்கிய அந்தஸ்து பெற்ற’ அவலச்சித்திரிப்பையும் விட உகந்தவையே. அதேபோல, எவ்விதச் சித்திரிப்புகளிலும், அனுபவப் பகிர்வுகளிலும், எழுத்தின் சுயகௌரவம் முக்கியம் என்று கருதுவேன். இது மிகவும் அகவயமான மதிப்பீடே என்றால், கெட்டி அட்டைப் புத்தகங்கள், உள்ளடக்கமும் நன்றாக இருக்கும் என்று கருதுவேன், என்பதையும் தெரிந்துகொண்டுவிடுங்கள்.

இப்போது புத்தகங்கள்.

*
Continue reading

‘க கதை கழுதை’ அல்லது ‘முடிக்கல மாமு’

தமிழில் நல்ல மரபுக் கவிதைகள் எழுதப்பட்டுவிட்டன என்றால் கவிஞர்கள் தவிர, புதுக்கவிதை எழுதும் ஏனையோர் ஒப்புக்கொள்வார்கள். அதைப்போல தமிழில் நல்ல சிறுகதைகள் எழுதப்பட்டுவிட்டன என்றால் தொழில்முறை எழுத்தாளர்கள் தவிர மற்ற எழுத்தாளர்கள் ஒப்புக்கொள்வார்கள். வாசிப்பவர்களுக்கு எழுத்து சார்ந்த கருத்துரைக்க என்றுமே உரிமையில்லை என்பதால் தமிழ் வாசிக்கத்தெரிந்த மிச்சம் சில கோடி ஜனத்தை இக்கருத்துருவாக்கத்தில் பொருட்டாகக் கொள்ளவேண்டியதில்லை.

நல்ல சிறுகதைகள் எழுதப்பட்டுவிட்டன என்பதற்கான போதிய ஆதாரம் இதுவரை எழுதப்பட்ட சிறுகதைகளில் மட்டுமே கிடைக்குமா என்கிற சந்தேகம் உங்களுக்கு ஏற்படுமாயின் அதற்கு என்னிடம் பதில் நேரடியாக இல்லை. இணையத்தில் ஓரிரு பக்கங்களை வாசிக்கும் அவகாசத்தையும், ஆரோக்யத்தையும், கவனத்தையும், கரண்ட்டையும் நீங்கள் இக்கலியுகத்தில் கைவரப்பெற்றிருந்தால், கீழேயுள்ளதை வாசித்து, எழுதப்பட்டுவிட்ட அது, நல்ல கதையா என்று யோசியுங்கள். உங்கள் முடிவே, உங்கள் மேற்படி சந்தேகத்திற்கான, என் பதிலும்.

*
Continue reading

அம்ருதாவில் அறிவியல்

ஓவியம், இலக்கியம், உலகத்திரை, பிற கலைகள் பற்றிய கட்டுரைகள், ஓரிரண்டு சமூகச்சாடல்கள், கவிதைகள், சிறுகதைகள், நாகரத்தினம் கிருஷ்ணா, இந்திரா பார்த்தசாரதி, அழகியசிங்கர் பக்கங்கள், விற்பனைக்கு தொட்டுக்கொள்ள சச்சின், சினிமா, அக்கபோர், நிரந்தரமாய் பட்டுப்புடவையில் அனுஷ்கா படம் என்று வெளிவரும் ‘அம்ருதா’ அச்சுஊடக மாதாந்திரியில் “வாழ்க்கை விஞ்ஞானம்” என்கிற பத்தித் தலைப்பின்கீழ் (என் தேர்வல்ல), ஒரு வருடம் எழுதிவிட்டேன். எனக்குத் தெரிந்தவரையில், வகையில், அறிவியல் கட்டுரைகளை.
Continue reading

தொடர்கடி

2013-thodarkadi-arunn

அவள்: ஏரோப்ளேன்ல 50 செங்கல் இருக்கு; ஒண்ணு கீழே விழுந்தா மிச்சம்?

இவன்: 49

அவள்: ஓகே. யானைய ஃப்ரிட்ஜ் உள்ள எப்டி வெப்பே?

இவன்: பழைய ஜோக்; கதவ திறந்து.

அவள்: அப்ப மானை?
Continue reading

புதுவருடம், சுயபோகம்

[சொந்தக் கதைதான். விருப்பமில்லாவிடினும்  கண்டிப்பாக வாசியுங்கள். வேறு எதற்கு எழுதுகிறேனாம்… :-) ]

2013 இல் நுழைந்தாயிற்று.

புத்தாண்டு தீர்மானம்: ஒன்றாம் தேதி எழுதாதே. சுயபோகமாய் உளருவதை ஒருநாளாவது ஒத்திவை.

இடைக்காலத்தில், புத்தாண்டு வாழ்த்துக்கள் சொல்வதற்கு அலைபேசியின் முகவரிப் பட்டியலை மேய்கையில், பெயர்களின் பின்னால் தேங்கியிருக்கும் பழைய சில்லறை மனஸ்தாபங்களே ஞாபகம் வருகிறது.

புத்தாண்டு தீர்மானம்: பழையன களை. வேறொரு வருடம் ‘புதுவருட அ(றி)வியல் உறுதிமொழிகள்’ என்பதில் சொன்னவைகளையும் சேர்த்து.

அலைபேசியில் என் அழைப்பை ஏற்ற அனைவருக்கும் வாழ்த்து சொல்லிவிட்டேன். அலைபேசி எண் என்னிடம் இல்லாதவர்களை மட்டும் என்னால் அலைபேசியில் அழைக்க முடியவில்லை. புத்தாண்டு வாழ்த்துகளை மட்டும் சொல்லிவிட்டேன்.
Continue reading

இசை தடங்க(ல்க)ள் – மேலும் சில

மேலும் சில இசை தடங்கள். 2012 மார்கழி இசை விழா தாக்கத்தில்.

முதல் தவணையில் அறிமுகத்தில் குறிப்பிட்டிருந்த கல்யாணகுணங்கள் அனைத்தும், இவற்றிற்கும் பொருந்தும். ‘புண்படுத்தும்’ நகைச்சுவை ஒத்துக்கொள்ளாதவர்கள், பார்த்து வாசியுங்கள். இவ்வருடத்தில், இதற்குமேல் இவ்வகையில் தொடரமாட்டேன் என்று உறுதியளித்தால் வாசித்துவிடுவீர்கள்தானே.

*

விளக்கி அல்லது பாராட்டி எழுதியதை தெரிவிக்கையில் “ஐ கேண்ட் ரீட் டாமில் யார்” என்பவர்கள், பாதகமான விமர்சனங்களை தமிழில் எழுதுகையில் சரியாகப் புரிந்துகொண்டு அடுத்த கச்சேரியில் கேண்டீனில் சந்திக்கையில் பக்கத்து டேபிளை கவனிப்பது,

செம்மொழியின் வெம்மை அல்லது கலைஞர்களின் தன்மை.

*

மேற்படி கருத்திற்கு விதிவிலக்காக நான் சந்தித்த பாடகர், சஞ்சய் சுப்ரமண்யன்.

2009இல் அவர் கச்சேரியை விமர்சனம் செய்து எழுதியிருந்த கட்டுரையை படித்தபிறகும், இன்றும் என்னை உற்சாகப்படுத்தி தொடர்ந்து தமிழில் எழுதச்சொல்வது

செம்மொழியின் பெருமை அல்லது கலைஞர்களின் மேன்மை.

*
Continue reading

இசை தடங்க(ல்க)ள்

இவை மார்கழி மாதத்தில் சென்னையில் சபாக்களில் (நாளுக்கு மூன்று நான்கு கச்சேரிகள் என) சங்கீதம் கேட்கையில் மனத்தில் ஏற்படும் தடங்கள். விமர்சனங்கள் அல்ல. உபயோகமான கருத்துகள் எனவும் சொல்லமுடியாது.

அதற்காக ரஞ்சகமானவை என்றும் தீர்மானித்துவிட முடியாது. ‘புண்படுத்தும்’ நகைச்சுவையுடன் இருப்பதால், வாராந்திரிகளில் வெளிவராது. தணிக்கை போக மிச்சம் ஏதும் வெளிவந்தால், “இசை துக்கடாக்கள்” என்றோ “சங்கீத சிப்ஸ்” என்றோ தலைப்பிடுவார்கள் (அழகிய பாடகிகள் படங்களுடன் அவர்கள் கடைக்கண்ணிற்கு அருகே பிரசுரிப்பார்கள்).

அனைத்தையும் இசை வம்புகள் என வகைப்படுத்தமுடியாது. சுவாரஸ்யமானவை எனலாம். அதானாலேயே இலக்கியத் தகுதியை இழந்துவிடலாம். அதானாலென்ன, நஷ்டம் இலக்கியத்திற்குதானே.

வாசித்து ‘வையுங்கள்’.

*
Continue reading

2012 டிசெம்பர் சங்கீத விழா: திருச்சூர் சகோதரர்கள் கச்சேரி

திருச்சூர் சகோதரர்கள் மைலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் கிளப்பில் நடத்திய கச்சேரி பற்றிய என்னுடைய சிறு விமர்சனம் இன்றைய (22/12/2012) ‘தி ஹிண்டு’ நாளிதழில் வெளியாகியுள்ளது.

Brothers in Harmony

நான் அனுப்பிய வடிவம் இங்கு உள்ளது.

இரு வடிவத்தையும் கவனமாக வாசிப்பவர்கள், சென்றமுறைகளைக் காட்டிலும் இம்முறை பிரசுரமான வடிவின் எடிட்டிங், எழுத்தாசிரியர் கூறவந்த கருத்துகள் சிதையாவண்ணம், சீராக அமைந்துள்ளதை கவனிக்கலாம். என் கருத்துகளை ஏற்று, உடன் அடுத்த ‘ரிவ்யூவில்’ செயல்படுத்திய “மார்கழி அன்லிமிட்டெட்” எடிட்டருக்கு என் நன்றிகள்.

[தமிழில், விரைவில்...]

2012 டிசெம்பர் சங்கீத விழா: அஸ்வத் நாராயணன் கச்சேரி

அஸ்வத் நாராயணன் கச்சேரி பற்றிய என்னுடைய சிறு விமர்சனம் இன்றைய (19/12/2012) ‘தி ஹிண்டு’ நாளிதழில் வெளியாகியுள்ளது.

நான் அனுப்பிய வடிவம் இங்கு உள்ளது.

இவ்விமர்சனங்கள் வழக்கமான “ஃப்ரைடே ரெவ்யூஸ்” பக்கங்களில் அல்லாமல், பிரதான நாளிதழ் உள்ளேயே (ஏழாம் பக்கத்தில்) இடம்பெறுவதால், சுருக்கமாய் 400 வார்த்தைகளுக்கு மிகாமல், இசை பரிச்சயம் இல்லாதவர்களும் வாசிக்கலாம் என்பதை மனதில்கொண்டு எழுதப்படவேண்டும் என்பது கட்டுப்பாடு.

நீங்கள் கர்நாடக இசை பிரியர் என்றால், 800 வார்த்தைகளையும் கடந்து இதிலுள்ளவைகளை வாசிக்கமுடியும். என்சாய் :-)

[தமிழில் விமர்சனங்களை தனிக்கட்டுரையாக பிறகு தொகுத்து வழங்குகிறேன்]

2012 டிசெம்பர் சங்கீத விழா: ‘தி ஹிண்டு’ கட்டுரை

2012 டிசெம்பர் சங்கீத விழாவையொட்டி ‘தி ஹிண்டு’ நாளிதழில் ‘மெட்ராஸ் மியுஸிக் அகாடமி’ பற்றிய என் ‘லைட் ரீடிங்’ கட்டுரை இன்று பிரசுரமாகியுள்ளது.

Academy, the house of bards

music_academy_jpgகோட்டோவியம் அளித்த கேஷவ்-விற்கும், ஏற்றுக்கொள்ளும் வடிவில் இக்கட்டுரையை வெளியிட்ட நல்ல எடிட்டருக்கும் நன்றி [எதற்கும் இங்கும் அங்கும் பார்த்துவிட்டு வாசியுங்கள்].

பூசிமொழுகியிருக்கும் எனதைவிட சுந்தர்ராவ் மற்றும் தாதாபாய் என்று ’குந்தளம்’ வாத்தியம் வாசிப்பர்களை கோலப்பன் பேட்டிகண்டு அமைத்திருக்கும் கட்டுரை நேரடியானது; அறச்சீற்றம் கொள்ளவைப்பது.

The fading beat

சார்ந்த கானொளி

 

டிஜிட்டலில் செதுக்கிய தலையா

இரண்டு நாள்கள் முன்னர் மொட்டை அடித்துக்கொண்டேன்.

ஏன் என்று காரணம் கேட்டால், இப்படிச்சொல்லலாம். சலூனுக்குச் சென்று நம் முடியையும் கொடுத்து நம் காசையும் கொடுப்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட சமூகச் சோகங்களில் ஒன்று. அதட்டிக் கேட்டால் ஒருக்கால் வெட்டியதை எடுத்துச்செல்லுங்கள் என்று திருப்பிக்கொடுக்கலாம். பிறகும், நம்மிடம் முன்னர் இருந்தது இப்போதும் நம்மிடமே உள்ளது, ஆனாலும் காசை கொடுக்கவேண்டியுள்ளதே என்று சோகம் மீளும், நீளும். எப்படியும் கொடுக்கப்போகும் காசிற்கு ‘மிகுதியான பலனாய்’ இருக்கட்டுமே என்றும், இப்படிச் செய்தால் மீண்டும் சலூன் செல்வதற்கு ஆறு மாசமாவது பிடிக்கும், காசு மிச்சம், என்றும்தான் மொட்டை. சுருக்கமாய், மிட் லைஃப் க்ரைசிஸ்.

மொட்டையின் பக்கவிளைவுகள் பல. வெளிப்பக்க விளைவுகள் நிதர்சனம். பின்வருமாறு.
Continue reading

அறிவியலும், சந்தை அறிவியலும்

சந்தை இலக்கியம் என்று சில பத்தாண்டுகளுக்கு முன் தமிழ் எழுத்துச்சூழலில் அறியப்பட்ட எழுத்துவகை இருந்தது நாமறிந்ததே. ‘சந்தை’, சமீபகாலமாக ‘வணிக’ அல்லது ‘கேளிக்கை’ என்று மாறியுள்ளது. வாசிப்பனுபவத்தில் அதற்கான தேவையும் பங்களிப்பும் இருந்தாலும், சந்தை இலக்கியத்தின் ரசனை என்பது வாசிக்கும் மக்கள் தொகையின் பொதுவான சராசரியை கவ்வி நிற்பது. சந்தை இலக்கியத்திற்கு விற்பனையே குறி. இதைப்போலவே ‘சந்தை அறிவியல்’ என்று ஒரு வகை உள்ளது. இன்று பரிமளிக்கிறது.

[சொல்வனம் இதழில் வெளியாகியுள்ள கட்டுரையில் மேலும் வாசிக்கலாம். கீழே தொடர்வது படங்கள் அற்ற அதன் ஒரு வடிவம்.]
Continue reading

பெயர் படு(த்து)ம் பாடு

தெய்வங்களுக்கு கோவிலில் ஆரத்தி எடுக்கையில் அப்பெயர் வரக் காரணம் கூறி அர்ச்சகர்கள் சிலாகிப்பார்கள். நாம் உச் கொட்டிக்கொண்டு மேலும் இரண்டு முறை கன்னத்தில் போட்டுக்கொண்டு வருவோம். அவ்வகையில் என் பெயர் காரணம் பற்றி பலர் எனக்குப் பற்றிக்கொள்ளும் அளவிற்கு ஊகித்து படுத்தி இருக்கிறார்கள். கன்னத்தில் போடவேண்டும் என்றுதான் தோன்றும். அவர்கள் கன்னத்தில்.

கேட்கும் அனைவரையும் அப்படிச் செய்யமுடியாது என்பதாலும் (காரணம் கடைசிவரியில்), இனிமேலும் இவ்வகையில் வேறுசிலர் படுத்துவார்கள் என்பதாலும், நானே ஒரு சுய பெயர் விளக்கம் கொடுத்துவிடலாம் என்று இதை எழுதிவைக்கிறேன்.
Continue reading

ஆர்செனிக் பாக்டீரியா தற்காலிக அடக்கம்

நமக்கு விஷமாகிய ஆர்செனிக் மூலக்கூறுகளை ‘உண்டு’ வாழும் பாக்டீரியாக்கள் நம் உலகில் உள்ளது என்று 2010இல் ஒரு அறிவியல் செய்தி வெளியாகியது. அமெரிக்காவின் நாஸா ஆராய்ச்சி மையத்திடம் மான்யம் பெற்ற ஃபெலிஸா உல்ஃப்-ஸைமன் மற்றும் விஞ்ஞானிகள் குழு கலிஃபோர்னியா மாநிலத்தின் மோனோ ஏரியின் சேற்றில் வாழும் GFAJ-1 என்று குறிப்பிடப்படும் நுண்ணுயிரை பரிசோதித்து அவைகளால் ஆர்செனிக்கை உண்டு வாழமுடியும் என்று ஊகித்தார்கள். அதனால், மரபணுவில் பாஸ்பரஸ் மூலப்பொருளுக்கு பதிலாக உபயோகித்துகொள்ளும் அளவிற்கு, நமக்கு விஷமாகிய, ஆர்செனிக்கை உட்கொள்ளும் நுண்ணுயிர்கள் உலகில் உள்ளது என்று 2010இல் “சயின்ஸ்” ஆராய்ச்சி சஞ்சிகையில் அறிவித்தார்கள். விஷ(ய)ம் கேள்விப்பட்டு அங்காடித்தெருவில் ஆர்செனிக்கை pet food பகுதிக்கு மாற்றினார்கள்.

ஆனால், ஃபெலிஸா வுல்ஃப்-சைமனால் ஆர்செனிக் சூழலில் தழைத்ததாக கருதப்பட்ட அதே பாக்டீரியாவினால் அடுத்த இரண்டு ஆராய்ச்சிக் குழுக்களின் மறு-பரிசோதனைகளில் (ஜூலை 2012 இம்முடிவுகள் வெளியாகின), அதே ஆர்செனிக் அதிகமான சூழலில், தழைக்கமுடியவில்லை. எவரது பரிசோதனைகள் தவறானவை? இன்றைக்கான சரியான புரிதல் எது? கட்டுரையில் விவரிப்போம்.

[எச்சரிக்கை: கட்டுரையில் படங்களோ, ஜோக்குகளோ, கிடையாது. சிட்டிகை ஆங்கில வாடை கலந்த நீண்ட விவரணை மட்டுமே.]
Continue reading

ஏலியன்ஸ் திவசம்

ஏலியன்ஸ், வளி-அறிவு-ஜீவராசிகள், பற்றி தமிழில் ஒரு அறிவியல் புத்தகம் பதிப்பாளரின் ஒப்புதலுடனேயே தொடங்கி, எழுதி முடித்து, அக்டோபர் 29, 2010 அன்று அளித்தேன். வெளிவராத அப்புத்தக வடிவிற்கு இன்று (அக்டோபர் 29, 2012) இரண்டாவது வருஷாப்திகம். திவசம்.

முதல் திவசத்தை மனதில் ஒட்டியிருந்த சில நல்லுணர்வு நம்பிக்கைகளால் விமர்சையாக கொண்டாட முயலவில்லை. புத்துயிர் ஊட்டி புத்தக வடிவை பதிப்பாளரிடம் கிடத்தினேன். இன்று இரண்டாவது திவசத்தை தடபுடலாக்க வேலைவெட்டியில்லாத அறிவு விழைந்தாலும் ஆகவேண்டியதை பார்க்கும் மனது கசப்பினால் கடந்துசென்றுவிட்டது. அதனால் எள்ளுருண்டை, சுவியன் சகிதமாய் ‘ஞானவாபியில்’ விமர்சையை தவிர்த்து, வீட்டில் சிம்பிளாய் கறிவேப்பிலை துவையல் மட்டும் செய்யச்சொல்லியிருக்கிறேன்.

என்னத்தான் மின்காந்த வெளியில் இரண்டடிமான எண்களாய் நிர்குணருபத்தில் அ-வைசேஷிகமாய் புத்தகம் தூலவடிவு பெற்றிருந்தாலும், லாப்டாப்பினுள்ளேயே பிணத்தை இரண்டு வருடமாய் வைத்திருந்தால் டைப் அடிக்கும் விரலும் நாறுகிறது. ஹார்ட்-டிஸ்க்கை ஃபார்மாட் செய்து, புனர்பூஜை, ஃபினாயில், போட்டு மறுவாழ்வு கொடுத்துள்ளேன்.
Continue reading

என் புத்தகம்

என் புத்தகம் ஒன்று பிரசுரமாகியுள்ளது.

பதற்றமடையாமல் மேலும் வாசியுங்கள். Ane Books நிறுவனம் இந்தியாவிலும் (சார்க் நாடுகளிலும்), CRC Press நிறுவனம் உலக அளவிலும் வெளியிட்டுள்ளார்கள். அமேஸான் சந்தையிலும் வாங்கலாம்.

ஆய்வாள பேராசிரியர்கள் வழங்கியுள்ள இரண்டு அணிந்துரைகள், என் முகவுரை, நன்றியுரை மற்றும் உள்ளடக்கப் பட்டியல் அனைத்தையும் இந்தச் சுட்டியில் தொடங்கி வாசிக்கலாம் http://www.nonoscience.info/pm-book.html

இனி சார்ந்த நகைச்சுவை…
Continue reading