செவ்வாயில் உயிர்
ஏலியன்களை ஏன் எங்கோ தேடவேண்டும். முதலில் அருகில் தேடிப்பார்க்கலாமே என்று நினைத்தால் தேடவேண்டிய இடங்கள் சில உள்ளன.
முதலில் நம் உலகம். அமேசான் காடு, ஆழ்கடல், இமாலயா, ஈஞ்சம்பாடி என பல இடங்களை, காத்து கருப்பு அடிச்சுருமேன்னு தேடாமல் விட்டுவைத்திருக்கிறோம். அவ்வப்போது பிரடேட்டர் (predator) போன்ற திரைப்படங்கள் எடுத்து இங்கெல்லாம் வேற்றுகிரக ஏலியன்ஸ் உலவலாம் என்று பூச்சாண்டி விடுகிறோம். ஆனாலும் அவகாசமிருக்கையில் ஈஞ்சம்பாடி போன்ற பகுதிகளில், அறிவியலார்த்தமான ஏலியன்ஸ், தொல்பொருள் ஆராய்ச்சி என தேடுதலுக்கு முன்னரே வேலிகட்டி பிளாட்டு போட்டு மனிதர்களை குடியேறிவிடுகிறோம்.
ரேடியோ கார்பன் டேட்டிங்
ஏலியபுராணத்தின் முடிவில் செவ்வாய் கிரகம் செல்வதாக இருந்தேன். ஆனாலும் இது ஞானமரபை தன்னுள் அமானுடமாக இருத்திப் பொலிவுறும் எழுத்துக்களை மட்டும் வாழும்நேரமனைத்திலும் செம்மையான வாசிப்பதனால் நாபியிலிருந்து கிளர்ந்தெழும் வாசிப்புலன்கள் மட்டுமே உணர்ந்துகொள்ளமுடிந்த நெகிழ்சியூட்டும் மனிதம் வெளிப்படும் கட்டுரைத்தொடர் இல்லையே. வெறும் அறிவுத்துறை அறிவியல்தானே. எதைவேண்டுமானாலும் இக்கட்டுரைகளில் எங்கு வேண்டுமானாலும் விளக்கலாம், விலக்கலாம், இல்லையா.
அதனால், செவ்வாயினுள் செல்வதற்கு முன் ஒரு ரேடியோ கார்பன் டேட்டிங் போய்வருவோம்.
இந்த இடைப்பயணத்தை விரும்பாதவர்கள், அடுத்த கட்டுரைக்கு காத்திருங்கள். உங்கள் ஏலியன்ஸ், செவ்வாய் பற்றிய அறிதல் புரிதலுக்கு எந்த பங்கமும் வராது.
கிளாஸ்ஃபெஸ்ட் 2010
ஆசிரியர் மேர்ப்பார்வையில், மாணவர்கள் ஏற்று நடத்தும் ஆஆடி மெட்ராஸின் மியூசிக் கிளப்பிற்கு இந்த வருடம் 40 வயது. அதையொட்டி இன்றிலிருந்து தொடங்கப்படும் கிளாஸ்ஃபெஸ்ட் 2010 (Clasfest 2010) கர்நாடக இசை கச்சேரி நிகழ்ச்சி நிரல் பின்வறுமாறு.

ஹோம்மேட் இசை வீடியோக்கள் விளக்கங்கள்
ராகம் தானம் பல்லவியை பற்றி ஒரு விமர்சன கட்டுரை எழுதுவதாக தொடங்கி, இழுத்து இழுத்து பல பாகங்களாக சொல்வனம் இணைய இதழில் என் கர்நாடக இசை (பற்றிய) கட்டுரைகள், ஏதோ ஒரு திசையில் போய்கொண்டிருக்கிறது. கட்டுரையின் நான்காவது பாகத்திற்காக, ஆர்வக்கோளாரில் சில விளக்க வீடியோக்கள் வீட்டில் இருப்பவர்களை இரவு தூங்கவிடாமல் படுத்தி, எடுத்துப்பார்த்தேன். சுற்றியுள்ள விளக்கங்களை சுருக்கமாக கொடுத்து, இங்கு அவ்வீடியோக்களை தருகிறேன்.
விரிவாக, சொல்வனம் இணைய-இதழில் வெளியாகியிருக்கும் என் ராகம் தானம் பல்லவி – பாகம் நான்கு கட்டுரையில் படித்துக்கொள்ளுங்கள்.
ஞாபகம் வருதே 2.0

சமீபத்தில் ஞாபகம் வருதே ஞாபகம் வருதே என்று பாட்டு போட்டு அலுமினி(ய) பாத்திரங்களை அழைத்து நான் என்றோ (ஓரளவு) படித்த பொறியியல் கல்லூரி தன் பவள விழாவை ஒரு வாரம் கொண்டாடியது. அநேகமாக வயதுவந்தவர், பெண்கள் என்று அனைவருக்கும் ஈமெயிலித்து, அதில் பலர் வருவதாய் பதில் மின்னஞ்சல் சத்தியம் செய்து, சாண்டா கிளாராவில் சரியான கணக்டிங் ஃப்ளைட் கிடைக்காததால் மெயிலிடப்படாத சிலர் மட்டும் ஓசி கார் மொஃபஸல் பஸ் ஏறிவந்திருந்தோம்.
ஏலியபுராணம்
கிறித்துவர்கள், யூதர்கள், முஸ்லீம்கள் என்று அனைவரும் குறிப்பிடும் எழக்கியல் துறவியின் மனதில் பழைய ஏற்பாட்டின் சில பகுதிகள் இன்னமும் தோன்றியிருக்கவில்லை. யூஃப்ரடெஸ் மற்றும் டைக்ரிஸ் நதிகள் வளப்புறச்செய்த பாபிலோனிய பிரதேசமான கால்டியா தேசம் (இன்றைய தென் இராக், குவைத் பகுதி). கி.மு. ஆறாம் நூற்றாண்டு உலகம்.
இலக்கியத்திலிருந்து வேறுபட்டு, ஆள், தேசம் காலம் என்ற தலைகீழ் தொடக்கத்தை தொடருமுன், கி.மு. என்றால் கிறிஸ்து பிறப்பதற்கு முன். இது கரீட்டா எப்போத்திலிருந்து என்பதில் சில குளறுபடிகள் இருக்கிறது. என்றோ இருந்த ஒருவருக்கு முன்பிருந்த காலம் என்று ஏன் சொல்லவேண்டும் என்று அறிவியல் கட்டுரை தொடக்கத்திலேயே சந்தேகம் வந்து இலக்கியம் படிக்க போய்விடாதீர்கள் (இதை படித்துவிட்டு அங்கு செல்லவும்).
உங்களுக்காக எழக்கியல் உலகில் இருந்த காலத்தை இப்போதைக்கு நாம் ஸ்ரீ.மு. 2500 என்று திருத்தி எழுதிக்கொள்வோம். ஸ்ரீ.மு, என்றால் ஸ்ரீதேவி பிறப்பதற்கு முன் (அவருக்கு 40 வயதிற்குமேல் சொன்னால் மனசு கேட்கமாட்டேன்கிறது, அதான் 2500 - கூட்டிகழித்து பார்த்தால் எழக்கியல் இருந்த காலம் சரியாகவே வரும்).
பல்லவி பட்டறை
[சொல்வனம் இணைய-இதழில் வெளியாகியிருக்கும் என் ராகம் தானம் பல்லவி – பாகம் மூன்று கட்டுரையின் ஒரு பகுதி]
பல்லவி என்பது நிச்சயம் வெறும் மெலடி மட்டுமல்ல. பல்லவி கலையும் அறிவியலும் கலந்துசெய்த கலவை. இந்த கருத்துக்கு எனக்கு டாக்டர். எம். வேதவல்லி சப்போர்ட். முதலில் ராகத்தை மெலடியாய் ஆலாபனை செய்துவிட்டு, தானமாய் லயம்சேர்த்து, பிறகு முத்தாய்ப்பாய் ராக, மெலடி லய கணக்கு மிளிர பல்லவி சாஹித்யம் அமைத்து பாடுவதே முறை. சாஹித்ய சாதுர்யங்களும், ராக பிடிகளும், லய கணக்குகளும் மெலடி ரிதம் என போட்டிபோட்டு கலக்கிவருவதுதான் பல்லவி.
சிலருக்கு இந்த ஜிகிர்தண்டா கலவை கடவுள் (மெலடி) பாதி, மிருகம் (லயம்) பாதி போல. பல்லவியில் ஆதிதாளம் தாண்டி, மிஸ்ர ஜம்பை என்றொ, இல்லை இரண்டு களையில் முக்கால் இடம் தள்ளி தொடங்கி த்ரிகாலத்தில் அனுலோமம் செய்தல் என்று லயம் சற்று தூக்கினாலே, ரொம்ப கணக்குவழக்கு சௌக்யமே போச்சு என்று அங்கலாய்ப்பர். இக்கட்சியில் பல இசைவிமர்சகர்களும் உண்டு. உண்மை இவர்களுக்கு பெரும்பாலும் தாளம் போட வராது. இல்லை சில ஆவர்தங்களுக்கு மேல் நிற்காது.
ஏலியன்சோலை
செம்மொழிப்பிரதேசங்களான குறிஞ்சி, முல்லை, கோவை, திருமாலிருஞ்சோலை அடுத்து ஏலியன்ஸ் மற்றும் ஏலியன்ஸ் சார்ந்த அறிவுப்பரப்பிற்கு ஏலியன்சோலை என்று பெயர். பின்இணையத்துவ நவீனத்தமிழ் சொல்லாக்கம் என்றால் இலக்கிய நெடி கமழலாம். ஆனால் இது ஒரு இலக்கிய கற்பனை வரண்ட பிரதேசம். கேளிக்கை விஞ்ஞானப்புனைவுகள் கட்டட்ற காளானாய் தோன்றிச்செழிக்கும் வெறும் அறிவுத்துறை. இப்பரப்பை பற்றிய கதைகள் கட்டுரைகளில் படைப்பூக்கம் கம்மி. எழுதுபவர்களும் வெறும் மனிதர்களே. ஏலியன்ஸ்கள் இல்லை.
வாசிப்பவர்களை பற்றி இன்னமும் முடிவாகவில்லை.
ஈதிப்படியிருந்தாலும், அன்றாட பயன்பாட்டிற்கு, மனிதர்களாய் நாம் ஏலியன்ஸ் - அந்நியர்கள் - பற்றி ஒரு அறிவார்த்தமான கருத்துகொள்வதற்கு பல விஷயங்களை பலவருடங்களாக இத்துறை அறிவியல் செட்டியார்கள் (SETI-யார்கள் ) திறம்பட கற்பனைசெய்திருக்கிறார்கள். அநேகமாக சாமன்யர்க்கும் புரியும் எளிமையான அறிவியல் சிந்தைகளே.
ராகம் தானம் பல்லவி – சில பதில்கள்
[சொல்வனம் இணைய-இதழில் வெளியாகியிருக்கும் என் ராகம் தானம் பல்லவி – பாகம் இரண்டு கட்டுரையின் ஒரு பகுதி]
ராகம் தானம் பல்லவி பற்றிய என் சொல்வனம் கட்டுரை முதல் பாகத்தில் எனக்கு தெரிந்தமட்டில் மூன்று பிழைகள் இருந்தன. எம்.எஸ்.ஷீலா கர்நாடகா. வாக்கியத்தில் ஆந்திரப்பாடகர்களுடன் சேர்த்துவிட்டேன். ஆனாலும் அவரும் அநேக கச்சேரிகளில் ரா.தா.ப. பாடுவார். 1965 கலாநிதி ஆலத்தூர் வெங்கடேச ஐயர் என்று குறிப்பிட்டுவிட்டேன். சரியானது ஆலத்தூர் சகோதரர்களே. அதைப்போல அரியக்குடி ஐம்பதுகளில் (1950) கொண்டுவந்த கச்சேரி பாணி என்று எழுதியிருந்தேன். 1930 40 களிலே அவர் அதைசெய்துவிட்டாராம். முன்னூறு வயது மதிக்கத்தக்க என் இசைநண்பர் குட்டுகிறார். மகிழ்ச்சி.
எங்கே ராகம் தானம் பல்லவி
[சொல்வனம் இணைய-இதழில் வெளியாகியிருக்கும் என் ராகம் தானம் பல்லவி – பாகம் ஒன்று கட்டுரையின் ஒரு பகுதி]
ஆழ்வாரின் கிளரொளி இளமையொத்த தற்கால கச்சேரி மூட்டைகளில் வழக்கொழிந்துபோய்கொண்டிருக்கும், கர்நாடக சங்கீதத்திற்கு இன்றியமையாத அங்கங்களில் ஒன்று, ராகம் தானம் பல்லவி. சுருக்கமாக RTP.
ஒரு நூற்றாண்டிற்கு முன் ராகம் தானம் பல்லவி தான் கச்சேரியை தொடங்கியதாம். பல வேளைகளில் ஒரே RTPயே மொத்த கச்சேரியாகவும் வியாபித்து பரிமளிக்கும். ஆனால் இக்கால - முக்கியமாக, சென்னை டிசெம்பர் சீசன் – கச்சேரிகளை கவனித்தால், பெரும்பாலும் இப்படி அமைந்திருக்கும். 1 வர்ணம், 1 சப் மெயின், 1 மெயின் உருப்படி், 1 சொதப்பல் முயற்சி (புது ராகம், இல்லை கீர்த்தனை), 1 அபார முயற்சி (அந்த சீசனிற்கு கலைஞரின் உழைப்பு), 3 துக்கடா, 2 பஜன், 1 மங்களம் (ரசிகர்கள் எழுந்து செல்வதற்கான பின்னனி இசை) ஆகிய பத்துப்பாட்டு. இவ்வகை கச்சேரிகள் அனைத்து தர கர்நாடக ரசிகர்களையும் திருப்தி செய்யும், இரண்டரை மணி நேர, தலை கலையாத, நேர்வகிடு சமாச்சாரங்கள்.
நகர வாழ்கையின் அவசர கதி சிலுவையில் அறையப்பட்டுள்ள இக்கச்சேரிகளில் விஸ்தாரமான இரண்டு மணிநேர ராகம் தானம் பல்லவியை எதிர்பார்ப்பது அறிவியல் துறைகளில் இந்தியாவிலிருந்தபடியே இந்தியர் நோபல் வாங்க வேண்டும் என்று ஆசைப்படுவதற்கு ஒப்பானது. என்றாவதே நடக்கலாம்.
